உள்ளூர்

யாழ்ப்பாணம், வல்லை – அராலி வீதியை முற்றாக திறக்க வேண்டும் என பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Nov 1, 2024 - 06:16 PM
  • 0 Comments

வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 3 தசாப்தத்திற்கு மேல் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதி இன்று (01) திறந்து விடப்பட்டது எஞ்சிய வீதி இராணுவ இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே காணப்படுகிறது. அதனையும் தேர்தலுக்கு முன் மக்கள் பாவனைக்கு விடுவிக்க […]

செய்திகள்

பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்த்தரிப்பதற்கு நடவடிக்கை-வடக்கு ஆளுநர்

  • Oct 30, 2024 - 11:51 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பற்றிய கலந்துரையாடல் நேற்று (29) ஆளுநர் செயலகத்தில் நடைப்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர். விமான நிலைய உட்கட்டுமான அபிவிருத்தி, விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிகள்; தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. விமான நிலையத்தை அண்டிய பிரதேசத்தின் […]

உலகம் கனடா

பழங்குடியின சமூகத்தினரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி.

  • Oct 29, 2024 - 02:05 AM
  • 0 Comments

ஒன்றாரியோ பழங்குடியின சமூக மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமைக்காக இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த சம்பவத்திற்காக தற்பொழுது அமைச்சர் கரி ஆனந்தசங்கரி மன்னிப்பு கோரியுள்ளார் 1862 ஆம் ஆண்டு பழங்குடியின மக்களின் காணிகளை விற்பனை செய்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்த மக்களுக்கு வழங்காது வேறும் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளதுடன் அந்த மக்களுக்கு […]

செய்திகள்

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி தமிழ் தேசிய மக்கள் முன்னனி – கஜேந்திரகுமார்.

  • Oct 28, 2024 - 11:46 AM
  • 0 Comments

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிராகரிக்கக் கூடிய, ஒரு அணியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே உள்ளது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று (27) மன்னாரில் நடைப்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்றது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி […]

செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு நீதிமன்றமே நீதி வழங்கும் -ஜேவிபி தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 11:22 AM
  • 0 Comments

  வெளிநாட்டுத் தலையீடின் கீழ் இலரங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டே பல நாடுகளும் செயற்படுகின்றன. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது […]

செய்திகள்

மகிந்தவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிச்சயமாக இரத்துச் செய்யப்படும்- ஜனாதிபதி அனுர தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 10:46 AM
  • 0 Comments

  முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளிற்கு விசேட சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர்

தமிழ் மக்கள் கூட்டணியின் பிரச்சார நடவடிக்கையை கஜேந்திரக்குமார் குழப்புகின்றார் – வி.மணிவண்ணன்

  • Oct 25, 2024 - 06:43 AM
  • 0 Comments

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின்; பிரசார நடவடிக்கையை குழப்பும் நோக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூண்டுதலில் பருத்தித்துறை பொலிஸார் செயற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளாhர் பருத்தித்துறை பிரதேசத்pல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட 2; கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பருத்தித்துறை நகர பகுதியில்; வரதராஜன் பார்த்தீபன் தலைமையிலான அணியினர் தேர்தல் […]

செய்திகள்

நாமல் இன்றைய விசாரனைகளை முடித்து வெளியேறினார் .

  • Oct 24, 2024 - 01:17 PM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக தமக்கு அழைப்பு வந்ததாகவும் எனவே வாக்கு மூலம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

செய்திகள்

நாமல் இராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் உள்ளார்.

  • Oct 24, 2024 - 10:54 AM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்று (24) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு விடுக்கப்ட்ட அழைப்பையடுத்து அவர் சென்றுள்ளார். என்ன காரணத்திற்காக அழைக்கப்பட்டதாக தனக்கு தெரியது என நாமல் தெரிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்கு இது சிறந்த வழியென தெரிவித்துள்ள நாமல் தான் பொய் சொல்பவனல்லவெனவும் பொறுப்புடன் பதில் சொல்பவன் என மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Oct 23, 2024 - 12:58 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகததால் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp