செய்திகள்

இலங்கை அரசியல்வாதிகள் தனிப்பட்ட நலன்களை வைத்து செயற்படுகிறார்கள் என ஜப்பான் தூதுவர் தெரிவிப்பு.

  • Oct 23, 2024 - 12:47 PM
  • 0 Comments

இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் நலன்களிற்காக அனுகூலங்களை எதிர்பார்த்தார்கள் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் நல்ல வர்த்தக சூழல் இல்லை எனவும் இலங்கை நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லையெனவும் இலஞ்ச ஊழல் அற்றதாக காணப்படவில்லையென அவர் கவலை வெளியிட்டுள்ளார். ஜப்பான் நிறுவனங்கள் இலஞ்சம் பெறுவதுமில்லை கொடுப்தும் இல்லையென தெரிவித்த ஜப்பான் தூதுவர் இலஞ்சம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஜப்பான் நிறுவனங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடுவது வழமை எனவும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ரணில் ஏன் குழுவை நியமித்தார் சந்தேகம் வெளியிட்டார்- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

  • Oct 22, 2024 - 09:19 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகதன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎன்ஜே அல்விஸ் தலைமையில் குழு அமைத்ததன் உள்நோக்கம் என்னவென மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். ஷானி அபயசேகரவையும் ரவி செனிவிரத்னவையும் அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டதா என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

உலகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கனடாவில் சுட்டுக்கொலை.

  • Oct 22, 2024 - 05:16 PM
  • 0 Comments

ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒன்ராறியோ மாநிலம், மார்க்கம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்றையதினம் (20-10-2024) அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்திகள்

அபிவிருத்தியுடன் கூடிய அரசியல் உரிமையென்ற அங்கஜனின் மகுடத்தை அள்ளினார் எமில்காந்தன் .

  • Oct 22, 2024 - 04:10 PM
  • 0 Comments

மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தம்மை வெல்ல வைக்க வேண்டும் என சுயேட்சைக்குழு 7 இன் முதன்மை வேட்பாளரான எமில்காந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார் வவுனியாவில் இன்று (22) இடம்பெற்ற இளையோர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்/ அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் மனங்களிலும், எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதை நாம் வரவேற்பதாக தெரிவித்த எமில்காந்தன தமிழ் இளைஞர், யுவதிகள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தம்மால் […]

செய்திகள்

‘தூய்மையான இலங்கை’ எனும் பெயரில் வேலைத் திட்டம் ஸ்டார்ட்.

  • Oct 21, 2024 - 12:14 PM
  • 0 Comments

‘தூய்மையான இலங்கை’ என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் போது ‘சுற்றுச் சூழலை இலக்காக கொண்டே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும், நாடெங்கும் சமமாக ‘தூய்மையான இலங்கை’ என்னும் வேலைத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.  

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதலின் சூத்திரதாரி யாரென உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

  • Oct 21, 2024 - 11:42 AM
  • 0 Comments

  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவே ஈஸ்ட்டர் தாக்குதலின் பிரதானி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் ஆகிய விசாரணை குழுவின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

தம்பி சுமந்திரன் தம்பி சிறிதரன் 2 பேரும் கை குடுத்து கோபம் இல்லையென்று சொல்லுங்கோ – சீ.வீ.கே. சிவஞானம் செய்திகள்

தம்பி சுமந்திரன் தம்பி சிறிதரன் 2 பேரும் கை குடுத்து கோபம் இல்லையென்று சொல்லுங்கோ – சீ.வீ.கே. சிவஞானம்

  • Oct 20, 2024 - 11:56 AM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்தின் முக்கிய வேட்பாளர்களா எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோரை சமாதானப்படுத்த முயற்சி நடக்கின்றது சிவஞானம் சிறிதரனுக்கும், எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கட்சிக்கு யார் தலைவர் என்பது தான் போட்டி ஜனநாயகமாக சிறிதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பின் சுமந்திரன் கட்சியின் செயலாளர் பதவியை கோரினார். இதனையடுத்து எழுந்த பிரச்சினை தொடர்கின்றது நீதிமன்ற இடைக்காலத் தடையால் சிறிதரனால் அப்பதவியில் நீடிக்க முடிந்திருக்கவில்லை. இதனையடுத்து, இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்திருந்தது இவ்வாறான […]

உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்ட்டுள்ளார்.

  • Oct 18, 2024 - 12:16 PM
  • 0 Comments

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தலைவர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து செய்தி,இலங்கையிலிருந்து சமீபத்திய செய்தி,தமிழ் செய்தி,உடனுக்குடனான செய்தி இலங்கை,இலங்கை செய்தி,தமிழ் இலங்கை செய்தி,லோஷன்,a.r.v.லோஷன்,sri lanka news,tamil sri lanka news,breaking news sri lanka,latest breaking news,news from jaffna,tamil news,lanka tamil,tamil lanka news,இலங்கை தமிழ்,breaking news tamil,jaffna news,tamilcomedy,tamilmusic,tamilmovies,tamilculture,tamilfood,tamilfashion,tamilsports,tamiltravel செய்திகள்

அரசியலை வைத்து பணம் உழைக்கும் தேவை எனக்கில்லை – டில்ஷான் திலகரத்ன

  • Oct 17, 2024 - 08:12 AM
  • 0 Comments

  கிரிகெட் போட்டிகளில் சம்பாதித்துவிட்டேன். எனவே அரசியலில் வந்து பணம் உழைக்கும் தேவை எனக்குக் இல்லையென ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் களுத்துரை வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது’ இப்போது புதியவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் வாகன பெர்மிட் உள்ளிட்ட சலுகைகளை இல்லாது செய்துள்ளார். நாம் விளையாட்டுப் போட்டிகளில் சம்பாதித்துவிட்டோம். எனவே அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டியத் தேவை எமக்கு கிடையாது. ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp