e0ae85e0aeb0e0af8de0ae9ae0af8de0ae9ae0af81e0aea9e0aebe e0ae8ee0aeaee0af8de0aeaae0aebf e0aeafe0aebfe0aea9e0af8d e0aeaae0aea4e0aeb5 | Pathivu News செய்திகள்

அர்ச்சுனா எம்பி யின் பதவி பறிபோகுமா? புதிய திருப்பம்

  • Dec 17, 2024 - 04:36 PM
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசாங்க வைத்திய அதிகாரி பதவியில் இருந்து இராஜினாமா செய்யாமல் கையளித்துள்ளதாக புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் மனு தாக்கல் செய்துள்ளார். அரச சேவையில் தனிநபர் ஒருவர் வகிக்கும் பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என்றும், அவர் எம்.பி.யாக நியமிக்கப்பட்டதை […]

e0aeb5e0aeb3e0aebfe0aeaee0aea3e0af8de0ae9fe0aeb2e0aeb5e0aebfe0aeafe0aeb2e0af8d e0aea4e0aebfe0aea3e0af88e0ae95e0af8de0ae95e0aeb3e0aeae | Pathivu News உள்ளூர் செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

  • Dec 17, 2024 - 02:42 AM
  • 0 Comments

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் நகரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை […]

e0ae95e0af81e0aeb1e0af8de0aeb1e0aeaae0af8de0aeaae0af81e0aeb2e0aea9e0aebee0aeafe0af8de0aeb5e0af81 e0aea4e0aebfe0aea3e0af88e0ae95e0af8d | Pathivu News செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நீதியமைச்சர்

  • Dec 16, 2024 - 04:57 PM
  • 0 Comments

பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுயவிபரக் கோவையில் உறுப்பினர்களின் கல்வித் தகைமை மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.

e0aea8e0aebee0ae9fe0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae89e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0aea9e0aeb0e0af8d e0aeb5e0af88 | Pathivu News உள்ளூர்

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா பிணையில் விடுதலை

  • Dec 16, 2024 - 04:52 PM
  • 0 Comments

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்; அருச்சுனாவுக்கும் சட்டத்தரணி என். கௌசல்யாக்கும் (தங்கம்) தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு கடமையாற்றிய வைத்தியர்களுக்கு இடையூறு விளைவித்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி […]

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebfe0aeafe0af88 e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeaf | Pathivu News செய்திகள்

இலங்கை ஜனாதிபதியை இந்திய ஜனாதிபதி, பிரதமர் வரவேற்பு

  • Dec 16, 2024 - 11:38 AM
  • 0 Comments

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை இன்று திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இணைந்து வரவேற்றனர். இந்த சம்பிரதாயபூர்வ வரவேற்பானது புது டில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.  

e0ae95e0aebee0aea3e0aebfe0ae95e0aeb3e0af88 e0aeb5e0aebfe0ae9fe0af81e0aeb5e0aebfe0ae95e0af8de0ae95 e0ae95e0aebee0aeb2 e0ae8ee0aeb2 | Pathivu News செய்திகள்

காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு ;

  • Dec 15, 2024 - 10:59 PM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினா இங்கு உரையாற்றிய சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ் மாவட்டத்தில் இராணுவ பிடியில் காணி விடுவிப்பதற்கு கால எல்லையை நிர்ணயிக்க முடியுமா? ஒரு கால எல்லையை நிர்ணயித்து செயல்படும்போதுதான் அதற்கான வேலைத்திட்டங்களை செயல்படுத்த முடியும். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் காணி விடுவிப்பு வெகு விரைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் […]

e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae9ae0af81 e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0ae87e0aeb0e0af81e0aea8e0af8de0aea4 | Pathivu News உள்ளூர் செய்திகள்

தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்கள் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

  • Dec 15, 2024 - 03:29 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் […]

e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae9ae0aeaae0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aeb0e0af8d e0aeaae0aea4e0aeb5e0aebfe0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News உள்ளூர் செய்திகள்

புதிய சபாநாயகர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை!

  • Dec 15, 2024 - 03:21 AM
  • 0 Comments

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நாட்டில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 13 ஆம் திகதி பிற்பகல் அசோக ரன்வல, சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். […]

e0ae9ae0aeaae0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aeb0e0aebfe0aea9e0af8d e0aeaae0aea4e0aeb5e0aebf e0aeb5e0aebfe0aeb2e0ae95e0aeb2e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

சபாநாயகரின் பதவி விலகல் கடித்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

  • Dec 15, 2024 - 03:05 AM
  • 0 Comments

சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தார். தனது கல்வித் தகுதி தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தற்போது அந்தத் தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தனது கல்வித்தகுதி தொடர்பாக எந்த […]

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 7 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு….! (காணொளி)

  • Dec 14, 2024 - 12:44 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சஜித் கையெழுத்திட்டார் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்து வழங்க நடவடிக்கை ரஷ்யா எமது அரசாங்கத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது https://www.youtube.com/watch?v=DbQa20cTiGA

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp