மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நடைமுறை ஜனாதிபதி தலமையில்..!
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும் போஷிப்பதற்குமான புதிய அதிகாரசபையை நிறுவும் நடைமுறையின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்றைய தினம்(29.04.2026) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ‘டித்வா’ (Ditwa) புயலின் போது ஏற்பட்ட மண்சரிவுகளால் மத்திய மலைநாட்டிற்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து போஷிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது கடுமையாக வலியுறுத்தினார். இதன்படி, மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் […]









