balali police allegation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பலாலி பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செய்ததாக செ.கஜேந்திரன் குற்றச்சாட்டு..!

  • May 26, 2026 - 10:44 AM
  • 0 Comments

பலாலி பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்காக  தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான வாக்குமூலம் பலாலி பொலிசாரால் பெறப்பட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 2025 டிசம்பர் 4ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் குறித்து பலாலி பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்தார்கள். அன்றையதினம் […]

illegal goods seized | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சட்டவிரோத பொருட்கள் பறிமுதல்..!

  • May 26, 2026 - 10:07 AM
  • 0 Comments

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய நபர்களை அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், சமீபகாலமாக தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, சீனியப்பா தர்கா, களிமண்குண்டு, திருப்புல்லாணி மற்றும் பாம்பன் […]

sl weather today 20 | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • May 26, 2026 - 09:59 AM
  • 0 Comments

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

north land release | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடக்கில் காணிகளில் சிலவற்றை விடுவிக்க நடவடிக்கை..!

  • May 25, 2026 - 11:01 AM
  • 0 Comments

வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் சிலவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் போதிய புரிதல் இன்றி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியின்படி, மக்களின் நிலங்களை மக்களுக்கே திரும்ப ஒப்படைப்பதற்கான செயல்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. கடந்த […]

foreign cigarette arrest | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இன்று அதிகாலை வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் மூவர் கைது..!

  • May 25, 2026 - 10:24 AM
  • 0 Comments

60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வர முற்பட்ட மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (25.05.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீனப் பிரஜைகள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இந்த சிகரெட்டுக்களை விமான நிலைய பசுமை வழி ஊடாக கடத்திச் செல்ல முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரிகளின் அவதானத்தைத் […]

judge rizwan suspension | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம்..!

  • May 25, 2026 - 10:20 AM
  • 0 Comments

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான் நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22.05.2026) முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிரான விசாரணைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிருபர் பாறுக் ஷிஹான்

trincomalee hospital issue | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பொறுப்பற்ற நிர்வாகம்..!

  • May 25, 2026 - 10:14 AM
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையானது பல்வேறு பௌதீக, ஆளனி வளப் பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது. இதனால் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதைவிட மருத்துவ அலட்சியப்போக்கு காரணமாக அநியாயமான முறையில் பல உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் திருகோணமலை வைத்தியசாலை இன்னும் உயிரோடு இருக்கிறதென்றால் அதற்கு அங்கு பணி புரியும் ஒரு சில வைத்தியர்களின் சேவையே காரணமாகும். திருகோணமலை வைத்தியசாலையின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட முற்பட்டால் அவற்றை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வைத்தியசாலைக்கு செல்கின்ற […]

rain increase sri lanka | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு..!

  • May 25, 2026 - 09:50 AM
  • 0 Comments

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நாடளாவிய ரீதியில் படிப்படியாக நிலைபெற்று வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில […]

missing fisherman | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் கடலில் மீன்பிடிக்க சென்றவர் மாயம்..!

  • May 25, 2026 - 09:47 AM
  • 0 Comments

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்றவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24.05.2026) களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றுமுன்தினம் கடலுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது. இதனையடுத்து குறித்த கடற்பகுதியில் தேடுதல் இடம்பெற்ற நிலையில், அவர் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அந்த […]

vithiya case prison suicide | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறைச்சாலையில் தற்கொலை..!

  • May 25, 2026 - 09:42 AM
  • 0 Comments

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 வயதுடைய அவர் நேற்று (24.05.2026) இரவு சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp