விடுதலைப் புலிகளை அழிக்குமாறு பாதுகாப்பு பிரதானிகளுக்கே நானே கட்டளையிட்டேன்- மகிந்த விசேட அறிக்கை
உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் எனக் குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். உள்நாட்டுப் போர் இடம்பெற்ற குறித்த காலத்தில் இலங்கையின் அப்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தாமே இருந்ததாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்தத் தாமே முடிவு செய்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். […]








