செய்திகள்

வவுனியா சிறைச்சாலை கைதி தற்கொலை

  • Nov 24, 2024 - 03:04 PM
  • 0 Comments

வவுனியா சிறைசாலையில் விளக்கமறியல் இருந்த 57 வயது முதியவர் தவறான முடிவெடுத்து நேற்று (23) இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதி நேற்றிரவு சிறைக்கூடத்துக்குள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தபோது, உடனடியாக சிறைக்காவலர்கள் அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர் அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் உயிரிழந்தவர் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபர் ஆவார். இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் […]

செய்திகள்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியூமி ஹஸ்திக” வுக்கு விளக்கமறியல் நீடிப்பு

  • Nov 13, 2024 - 03:05 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘பியுமா’ என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (13) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. இவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ‘குடு சலிந்து’ என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ஆவார். துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பியுமா’ கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் […]

உள்ளூர் செய்திகள்

தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது- வி.எஸ்.சிவகரன்

  • Nov 12, 2024 - 02:10 AM
  • 0 Comments

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது எனவே அனைவரும் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் நேற்று திங்கட்கிழமை (11) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது மாற்றம் ஊழலற்ற புதிய அரசியல் கலாசாரத்தை கட்டமைப்போம் இலங்கையராக ஒன்றிணைவோம் என கவர்ச்சிகரமாக பன்மைத்துவ […]

செய்திகள்

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையினர் போர் கொடி.

  • Nov 8, 2024 - 04:26 PM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு பல்வேறு காரணங்களால் தேர்தலில் போட்டியிட கட்சி அனுமதிக்கவில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து ஏற்புடையதல்லவென தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையினர் தெரிவித்துள்ளனர் ஆகவே சுமந்திரன் அவரது கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை செயலாளர் சூசையப்பு ஜஸ்ரின் துரம் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு […]

உலகம்

கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கிலக்காகி ஒருவர் பலி.

  • Nov 8, 2024 - 03:55 PM
  • 0 Comments

ஒன்றாறியோ மாகாணத்தில் ஒரிலியா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 26 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் பலியான நபரை கைது பொலிஸ் அலுவலர் கைது செய்ய முயன்ற போது அந்த நபர் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது இதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் […]

உள்ளூர்

ஊழல் பேர்வழியான ஒருவரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அநுர அரசு நியமித்துள்ளது- ஈபிடிபி.

  • Nov 5, 2024 - 09:47 PM
  • 0 Comments

பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பல்வேறு ஊழல் மோசடிளில் ஈடுபட்ட ஒருவரை நியமித்தமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவ்வாறு ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஊழலை ஒழித்து மாற்றத்தை கொண்டுவருவதாக […]

செய்திகள்

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்படடுள்ளது.

  • Nov 4, 2024 - 10:44 AM
  • 0 Comments

  கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 80 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு நீதிமன்றமே நீதி வழங்கும் -ஜேவிபி தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 11:22 AM
  • 0 Comments

  வெளிநாட்டுத் தலையீடின் கீழ் இலரங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டே பல நாடுகளும் செயற்படுகின்றன. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது […]

செய்திகள்

மகிந்தவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிச்சயமாக இரத்துச் செய்யப்படும்- ஜனாதிபதி அனுர தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 10:46 AM
  • 0 Comments

  முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளிற்கு விசேட சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதலின் சூத்திரதாரி யாரென உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

  • Oct 21, 2024 - 11:42 AM
  • 0 Comments

  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவே ஈஸ்ட்டர் தாக்குதலின் பிரதானி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் ஆகிய விசாரணை குழுவின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.