உலகம் செய்திகள்

வரியை உயர்த்திய விவகாரத்தில் அமெரிக்கா மீது [WTO] சீனா வழக்கு தொடரவுள்ளது

  • Feb 4, 2025 - 07:41 AM
  • 0 Comments

அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. […]

செய்திகள்

தமிழகத்தின் இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • Feb 3, 2025 - 07:41 AM
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவாகளிடமிருந்து விசைப் படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

செய்திகள்

நாமலுக்கு எதிராக மைத்திரி அரசு தாக்கல் செய்த அதே குற்றப்பத்திரிக்கையை அநுர அரசும் தாக்கல் செய்துள்ளது

  • Jan 28, 2025 - 08:47 PM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இந்திய கிரிஸ்ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ரக்பி அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இதற்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை தாக்கல் செய்திருந்த நிலையில் நாமல் ராஜபக்ஸ இந்த வழக்கில் ஒரு சந்தேக நபராகக் கைது […]

செய்திகள்

விடைக்கான கணக்கை போடும் கஜேந்திரக்குமார், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமே சிறப்பானது

  • Jan 28, 2025 - 08:25 PM
  • 0 Comments

தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையே கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் ஒன்றிணைவது சாத்தியமில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (28) ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வரவுள்ள அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமையவுள்ளது நாடாளுமன்றில் அநுர தரப்பு அதீத பெரும்பான்மையுடன் உள்ளது. அவர்களுக்கு எமது தரப்பின் ஆதரவு தேவையில்லை. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் […]

உலகம்

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது

  • Jan 27, 2025 - 10:43 AM
  • 0 Comments

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தனது துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான முந்தைய காலக்கெடுவைத் தவறவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘அமெரிக்காவால் கண்காணிக்கப்படும் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் பிப்ரவரி 18, 2025 வரை தொடர்ந்து அமலில் இருக்கும்’ என்று வெள்ளை மாளிகை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் […]

உலகம்

அமெரிக்கா மனித உரிமைகளை மீறி பிரேசில் மக்களை கைவிலங்குடன் நாடு கடத்தியது

  • Jan 27, 2025 - 09:40 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு கிழமை முடிவதற்கு முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் ஜனாதிபதி டிரம்ப்-இன் நடவடிக்கை உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது. நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்தனர் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இது அவமதிப்பையும் கடந்து, மனித […]

விளையாட்டு

திலக் வர்மாவின் நிதானமான ஆனால் வேகமான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது

  • Jan 26, 2025 - 08:48 AM
  • 0 Comments

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது. நூணய சுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் பட்லர் அதிரடியாக விளையாடி 45 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்தார் இறுதி கட்டத்தில் பிரைடன் கார்ஸ் அதிரடியாக ஆடி 17 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி […]

இந்தியா

தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக ஆளுநர் சித்தரித்ததற்கு தமிழக அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது

  • Jan 26, 2025 - 07:45 AM
  • 0 Comments

குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தில் கவர்னரின் செயல்பாடு, அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை, கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக செய்திகள் வந்து […]

இந்தியா

இந்தியாவின் நிதியமைச்சா வரவு செலவு திட்ட தயாரிப்பு பணிகளுக்கு அல்வா கொடுத்தார்

  • Jan 25, 2025 - 05:22 AM
  • 0 Comments

இந்திய பாராளுமன்ற பாதீட்டு கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி ஆரம்பமாகவுள்ளது அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் சபையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார். இதைத் தொடர்ந்து 2025-26 ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதியானதும் அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அதிகாரிகளும் ஊழியர்களும் அறைக்குள் […]

உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை இஸ்ரேல் போட்டுதள்ளியது?

  • Jan 23, 2025 - 08:27 AM
  • 0 Comments

ஈரான் ஆதரவுடன் லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கிடையே, இஸ்ரேல்-காசா இடையிலான போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி; சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஸேக் முகமது அலி ஹமாதி. அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். கடந்த 1985-ல் 153 பயணிகளுடன் ரோம் நகரில் இருந்து […]