உள்ளூர் செய்திகள்

வடக்கில் காணி அபகரிப்பை நிறுத்தக்கோருமாறு தென்னாபிரிக்காவிடம் கஜேந்திரகுமார் எம்.பி கோரிக்கை

  • May 22, 2025 - 02:09 PM
  • 0 Comments

தென்னாபிரிக்க தூதுவருக்கும் கஜேந்திரகுமார் எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது. இ்நத சந்திப்பின் பின்னர் கஜேந்திரகுமார் எம்.பி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இன்று காலை கொழும்பில் உள்ள தென்னாபிரிக்க தூதுவரைச் சந்தித்தேன். அவருடனான சந்திப்பில் மூன்று விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தேன். இந்த சந்திப்பின் போது கடந்த 2025 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் சுமார் 6000 ஏக்கர் காணிகளை அரச காணியாக சுவீகரித்து திட்டமிட்ட சிங்கள பௌத்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கே பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

  • May 22, 2025 - 01:38 PM
  • 0 Comments

சிலாபம் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர், உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பாலியல் தொந்தரவு செய்திகளை அனுப்பியதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி அளித்த முறையான புகாரைத் தொடர்ந்தும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலும், 62 வயதான சந்தேக நபர் புதன்கிழமை (21) காவலில் வைக்கப்பட்டார். பொலிஸாரின் தகவலின் படி, இந்தச் செய்திகள் நீதிபதிக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தியதால், விரிவான விசாரணை நடத்தப்பட்டது. ‘சட்டமன்ற வழக்கறிஞரால் உயர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அன்னையர் தினமான நேற்று தன்னுயிர் கொடுத்து குழந்தையை காப்பாற்றிய தாய்- நெகிழ்ச்சி சம்பவம்

  • May 12, 2025 - 02:04 PM
  • 0 Comments

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் நேற்று (11-05) அதிகாலை பேரூந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் தனது ஒன்பது மாத குழந்தையுடன் பஸ்ஸின் இடிபாடுகளுக்கள் சிக்கியிருந்த தாய் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார். குழந்தையை காப்பாற்றிய 45 வயதுடைய தாய் பின்னர் உயிரிழந்துள்ள துயரம் சம்பவம் பதிவாகியுள்ளது. கடுமையான காங்களுடன் பஸ்ஸிற்குள் சிக்கியிருந்த குறித்த தாய் மற்றும் அவரது குழந்தை பாதுகாப்பு பிரிவினர் கடும் பிரயத்தனத்துக்கு பின்னர் மீட்டுள்ளனர். […]

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பில் குடிமனையில் 6 அடி முதலை புகுந்ததால் பரபரப்பு

  • May 7, 2025 - 09:59 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டம், சின்ன ஊறணி பிரதேசத்தில் அமைந்துள்ள குடிமனை பகுதியில் இன்று அதிகாலை 6 அடி நீளமுடைய முதலை ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. விழிப்புடன் இருந்த பிரதேச மக்கள் குறித்த முதலை மீது கட்டுப்பாடுடன் நடவடிக்கை எடுத்து அதை பாதுகாப்பாக மடக்கி பிடித்தனர். பின்னர், அவர்கள் உடனடியாக வனஜீவராசிகள் திணைக்களத்தை தொடர்புகொண்டு முதலையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அண்மைக்காலமாக மட்டக்களப்பில் குடிமனைப் பகுதிகளுக்குள் முதலைகள் புகுந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகம் கனடா

முன்னான் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ காமெடி பீஸென டிரம்ப் தெரிவிப்பு

  • May 7, 2025 - 09:47 PM
  • 0 Comments

பிரதமர் மார்க் கார்னியை ‘ஆளுனர் கார்னி’ எனக் அழைக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமரை ‘கவர்னர் கார்னி’ என அழைத்தது இல்லையா? என ஊடகங்கள் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பயிருந்தன. ‘இன்னும் அழைக்கவில்லை. ஒருவேளை அழைக்க வேண்டிய அவசியமிருக்காது எனவும். ஆனால் ஜஸ்டின் டிரூடோவுடன் தமக்கு பல நகைச்சுவையான தருணங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது கார்னி பிரதமராகியிருப்பது, கனடாவுக்கே ஒரு பெரிய முன்னேற்றம் என டொனால்ட் டிரம்ப குறிப்பிட்டுள்ளா எதிர்வரும் […]

உலகம் கனடா

கனடா விற்பனை செய்யப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதியிடம் கனடா பிரதமர் நேரடியாக தெரிவித்துள்ளார்

  • May 7, 2025 - 09:36 PM
  • 0 Comments

தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை அவரது அலுவலகத்தில் கனடா பிரதமரான மார்க் கார்னி சந்தித்தார் அப்போதும், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இனைப்பது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்தார் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதால் கனடாவுக்கு வரி விலக்கு, பாதுகாப்பு என பல நன்மைகள் கிடைக்கும் என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார் அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கனடா பிரதமரான மார்க் கார்னி, அவர் பேசி முடித்ததும், சில இடங்கள் விற்பனைக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

40 பாடசாலைகளில் சேகரித்த தகவலின்படி, 9.1 வீதமான மாணவர்கள் உயிரை மாய்த்துச் கொண்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

  • May 5, 2025 - 01:40 PM
  • 0 Comments

உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு சமூகம் பொறுப்புக் கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர், கல்வி அமைச்சும் சம்பந்தப்பட்ட பாடசாலையும் இந்த சம்பவத்தில் நீதியான முறையில் செயல்பட்டிருந்தால், இவ்வாறான சம்பவம் நிகழாது எனக் கூறினார். ஜோசப் ஸ்டாலின், ‘அம்ஷிகாவின் மரணத்தில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்’ என்று அறிவித்துள்ளார். மேலும், ‘அந்த மாணவியின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இத்தகைய சம்பவம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்

  • May 2, 2025 - 05:11 PM
  • 0 Comments

ஓய்வூதியம் பெற்றவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2020 – 2024 ஆண்டுக்கான ஓய்வூதியம் பெற்றோரின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ‘2020 – 2024 ஓய்வூதிய ஒன்றியம்’ குழுவினர் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் […]

உள்ளூர் செய்திகள்

பாம்புடன் சமைத்த உணவை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்

  • May 2, 2025 - 04:21 PM
  • 0 Comments

பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பாம்பு ஒன்று இருந்த நிலையில், அந்த உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. சமையல்காரர் உயிரிழந்த பாம்பை ஒதுக்கிவிட்டு மதிய உணவை பரிமாறியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மொகாமா நகரில் சுமார் 500 குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டதாக […]

இந்தியா

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மோடி அனுமதி!

  • Apr 30, 2025 - 06:25 PM
  • 0 Comments

பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ,ந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எப்போது, எங்கு தாக்குதல்களை நடத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை ,ந்தியப் பிரதமர் வழங்கியுள்ளதாக, இந்திய அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று புது டெல்லியில் நடைபெற்ற விசேட […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp