road development | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் விபத்து; ஒருவர் காயம்

  • Apr 17, 2026 - 02:51 PM
  • 0 Comments

மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) முன்பாக சற்று நேரத்திற்கு முன்னர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விபத்தின் போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

vavuniya cross street | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வவுனியா முதலாம் குறுக்கு தெருவில் உள்ள பொன் வீடியோ தீப்பற்றி எரிந்தது..!

  • Apr 17, 2026 - 09:49 AM
  • 0 Comments

குறித்த அனர்த்தம் நேற்றைய(16.04.2026) தினம் பி.ப இடம்பெற்றது காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1447637486386056

400 crore boat | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

படகில் 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்..!

  • Apr 17, 2026 - 09:39 AM
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. குறித்த போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்தார். இதற்கமைய, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்தப் படகில் இருந்த போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் சோதனையிடப்பட்டதை அடுத்து, நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த […]

suspicious item | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக பொதிகளுடன் சிக்கிய படகு கரைக்கு..!

  • Apr 17, 2026 - 09:26 AM
  • 0 Comments

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு தற்போது திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று (16.04.2026) குறித்த நெடுநாள் மீன்பிடி படகு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது. அதனுடன் படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையின் நீண்டதூர நடவடிக்கைக் கப்பல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் படகும் மீனவர்களும் பொறுப்பேற்கப்பட்டனர். குறித்த […]

thansika incident | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாடகி தன்சிகாவிற்கு உடுத்துறையில் கெளரவிப்பு..!

  • Apr 16, 2026 - 11:13 AM
  • 0 Comments

கிளிநொச்சியில் இடம் பெற்ற காலக் குரல் பாடல் போட்டியில் முதலாவது இடத்தை பெற்ற யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறையைச் சேர்ந்த மாணவி ஜெ.தன்சிகாவிற்கான பாராட்டு விழா நேற்று(15.04.2026) உடுத்துறை பாரதி விளையாட்டு கழக பொதுமண்டபத்தில் முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார், கிளிநொச்சி வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு முதலாம் இடத்தை […]

tamil arasu party | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு..!

  • Apr 15, 2026 - 04:31 PM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (14.04.2026) யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார். நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உடுவில் பிரதேசசபை உறுப்பினர் தி.பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், ச.சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், […]

sri lanka rescue | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையால் மீட்கப்பட்ட ஈரானியக் கடற்படையினர் தாயகம் திரும்பினர்..!

  • Apr 15, 2026 - 04:20 PM
  • 0 Comments

இலங்கையால் மீட்கப்பட்ட இரண்டு போர்க்கப்பல்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட ஈரானியக் கடற்படையினர் தாயகம் திரும்பியுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர ராய்ட்டர்ஸ் மற்றும் ஏஎஃப்பி செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்தார். மார்ச் 4 அன்று இந்தியப் பெருங்கடலில் இருந்தபோது, ​​ஐரிஸ் தேனா நீர்மூழ்கிக் கப்பல் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் தேனாவில் இருந்த 104 கடற்படையினர் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த நேரத்தில், ஈரானியக் கப்பல்கள் இந்தியா ஏற்பாடு செய்திருந்த கடற்படைப் […]

sl weather 18 5 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Apr 15, 2026 - 09:27 AM
  • 0 Comments

15.04.2026 மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் […]

mullaitivu illegal | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு சட்டவிரோத உப்பள விவகாரம் ; எம்.ஏ.சுமந்திரனின் அதிரடி..!

  • Apr 13, 2026 - 04:54 PM
  • 0 Comments

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், குஞ்சுக்கால்வெளிப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை மகாவலி அதிகாரசபை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புசெய்து பெரும்பான்மை இனத்தவருக்கு உப்பளம் அமைப்பதற்கு வழங்கிய விவகாரம் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று நேரில் சென்று ஆராய்ந்துள்ளார். அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் காணிகளுக்குரிய கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்த மக்கள் ஆகியோருடன் கலந்துரையாடி குறித்த சட்டவிரோத உப்பள விவகாரம் தொடர்பில் சுமந்திரன் கேட்டறிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து […]

batticaloa temple | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஆலயம் ஒன்றுக்கு பலத்த பாதுகாப்பு..!

  • Apr 13, 2026 - 04:18 PM
  • 0 Comments

மட்டக்களப்பு, காத்தான்குடி மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சட்டவிரோத முயற்சி தொடர்பில் மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 20 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், சிறுவனை சிறுவர் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp