e0ae85e0ae9fe0af81e0aea4e0af8de0aea4 e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0ae85e0aeaee0aeb0e0af8de0aeb5e0af81 | Pathivu News செய்திகள்

அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 3ம் திகதிக்கு ஒத்திவைப்பு

  • Nov 21, 2024 - 12:44 PM
  • 0 Comments

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட உரை நிறைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தை அடுத்த அமர்வுக்காக டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 வரை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.

e0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeaf e0aeaee0aebee0ae95e0aebee0aea3 e0ae86e0aeb3e0af81e0aea8e0aeb0e0af88 e0aea4e0af86e0aea9e0af8d | Pathivu News செய்திகள்

மத்திய மாகாண ஆளுநரை தென்கொரிய தூதுவர் சந்தித்துள்ளார்

  • Nov 21, 2024 - 10:54 AM
  • 0 Comments

மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது. இரு நாட்டினதும் நட்புறவு, கல்வி கலாச்சார, சமய, விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. அத்துடன், இலங்கையில் தென்கொரியா செய்துள்ள முதலீடுகள் தொடர்பாகவும்,கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

19 e0aeaae0af8be0ae9fe0aebf e0aeb0e0af82e0aeaae0aebe e0aeaae0af86e0aeb1e0af81e0aeaee0aea4e0aebfe0aeafe0aebee0ae95 e0aeaae0af8be0aea4 | Pathivu News செய்திகள்

19 போடி ரூபா பெறுமதியாக போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு யுவதி கைது

  • Nov 15, 2024 - 04:32 PM
  • 0 Comments

19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் 27 வயதுடைய தாய்லாந்து பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று தினம் இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். சந்தேக நபரான தாய்லாந்து பெண்ணை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு […]

e0aeaae0aebee0aeb0e0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8d e0aea4e0aebfe0ae95e0aea4e0aebf | Pathivu News செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

  • Nov 4, 2024 - 12:53 PM
  • 0 Comments

  நாடாளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவைத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் திகதியானது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்; விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. தேர்தல் சட்டத்தின் […]

e0aeafe0af81e0aea4e0af8de0aea4e0aea4e0af8de0aea4e0aebee0aeb2e0af8d e0ae89e0aeafe0aebfe0aeb0e0aebfe0aeb4e0aea8e0af8de0aea4 e0aeaee0ae95 | Pathivu News செய்திகள்

யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு நினைவுத்தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்.

  • Nov 4, 2024 - 12:38 PM
  • 0 Comments

கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை மற்றும் சம உரிமையின்மை ஆகிய காரணிகளால் யுத்தம் தோற்றம் பெற்று பலரையும் காவு கொண்டது இந்த யுத்தத்தால் தமிழ் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் யுத்தம் மௌனித்து 15 […]

e0aeb5e0aea9e0af8de0aea9e0aebf e0aea4e0af87e0aeb0e0af8de0aea4e0aeb2e0af8d e0aeaee0aebee0aeb5e0ae9fe0af8de0ae9fe0aea4e0af8de0aea4e0aebf | Pathivu News செய்திகள்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது – தெரிவத்தாட்சி அலுவலர்.

  • Nov 2, 2024 - 11:36 AM
  • 0 Comments

    நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது வன்னி தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும் வவுனியா அரச அதிபருமான பி.எ. சரத்சந்திர தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் இதுவரை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 17 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வவுனியா தோதல் தொகுதியில் எட்டு முறைப்பாடுகளும், மன்னார் தோதல் தொகுதியில் எட்டு முறைப்பாடுகளும், முல்லைத்தீவு தோதல் தொகுதியில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. பாரதூரமான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லையெனவும் […]

e0aeb5e0aeb2e0aebfe0aea8e0af8de0aea4e0af81 e0ae95e0aebee0aea3e0aebee0aeaee0aeb2e0aebee0ae95e0af8de0ae95e0aeaae0af8de0aeaae0ae9fe0af8d | Pathivu News செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு நீதிமன்றமே நீதி வழங்கும் -ஜேவிபி தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 11:22 AM
  • 0 Comments

  வெளிநாட்டுத் தலையீடின் கீழ் இலரங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டே பல நாடுகளும் செயற்படுகின்றன. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது […]

e0aeaee0ae95e0aebfe0aea8e0af8de0aea4e0aeb5e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeb5e0aeb4e0ae99e0af8de0ae95e0aeaae0af8de0aeaae0ae9fe0af8d | Pathivu News செய்திகள்

மகிந்தவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிச்சயமாக இரத்துச் செய்யப்படும்- ஜனாதிபதி அனுர தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 10:46 AM
  • 0 Comments

  முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளிற்கு விசேட சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3e0aeaee0af8d e0aea4e0aebfe0aeb0e0af81e0aea8e0af86e0aeb2e0af8de0aeb5e0af87e0aeb2 | Pathivu News செய்திகள்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் முதியவரின் சடலம் மீட்பு.

  • Oct 27, 2024 - 05:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த வயோதிபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 79 வயதுடைய திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நேற்று (26) டெங்கு ஒழிப்பு கள விஜயத்தின் போதே முதியவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார், அதிகாரிகள் முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் இறந்து போயுள்ளார். உடனடியாக அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ […]

e0ae85e0aeb0e0aeb0e0aeb5e0aebee0aea9e0aebf e0aea8e0aebee0ae9fe0aebee0aeb3e0af81e0aeaee0aea9e0af8de0aeb1 e0aea4e0af87e0aeb0e0af8de0aea4 | Pathivu News செய்திகள்

அரரவானி நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

  • Oct 26, 2024 - 11:59 AM
  • 0 Comments

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தல் வரலாற்றில் போட்டியிடும் முதல் திருநங்கை என வரலாறு படைத்துள்ளார். பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நிமேஷா நன்றி தெரிவித்துள்ளார்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp