உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை..!

protecting children is governments duty | Pathivu News
சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் திட்டத்தின் மூலம் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வளரும் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் நோக்கில், பாதுகாப்பான இல்லத்திற்காக கடந்த வருடம் ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதுடன், இவ்வாண்டு அத்தொகை இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
குறித்த தொகை போதுமானதாக இல்லாவிட்டால் மேலதிக நிதி ஒதுக்கீடுகளைச் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (17) கலந்துகொண்ட போது, ​​ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருந்து சமூகமயப்படுத்தப்படும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கும், பாதுகாப்பற்ற மற்றும் அதிக ஆபத்தான சூழ்நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்காகவும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவதுடன், இன்றைய தினம் மேல் மாகாணப் பயனாளிகளுக்கு அந்த நிதி உதவி வழங்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
வாழ்விற்கு பலம் வேலைத்திட்டம் என்பது நமது நாட்டின் முக்கியமானதொரு துறையின் ஆரம்பமாகும். சிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பொக்கிஷம். நமது நாட்டில் பெற்றோரின் அரவணைப்பில் வளரும் பிள்ளைகளும் உள்ளனர். தாய், தந்தை அல்லது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளரும் பிள்ளைகளும் உள்ளனர்.
அவ்வாறில்லையெனில், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வளரும் பிள்ளைகளும் உள்ளனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் நமது பிள்ளைகள் வளர்கிறார்கள். எங்கு, எவ்வாறான சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவர்கள் நமது பிள்ளைகளே.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பிணைப்பு உள்ளது. அவர்கள் தமது பிள்ளைகளின் வாழ்க்கையைச் சிறப்பிக்கவும், அவர்களைப் பாதுகாக்கவுமே முயல்கிறார்கள்.
அதுபோலவே, சமூகத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையேயும் ஒரு தொடர்பு உள்ளது. சமூகம் எப்போதும் பிள்ளைகளுக்குச் சிறந்த பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது. அரசாங்கத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையேயும் ஒரு பிணைப்பு உள்ளது.
அரசாங்கம் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அதற்குப் பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கும் செயற்படுகிறது. அது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
1956 ஆம் ஆண்டு முதல் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டில்தான் அதன் செயற்பாடுகள் பூர்த்தியடைந்தது. எனினும், பிள்ளைகளை தொழிலில் ஈடுபடுத்துவதன் மூலம் மாத்திரம் அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறவில்லை.
இன்னும் பல துறைகளினூடாக அவர்கள் இன்னல்களுக்கு ஆளாகினர், பாதுகாப்பற்ற தன்மையை எதிர்கொண்டனர். எனவே, இன்னும் பல துறைகள் ஊடாக நாம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருக்கும் பிள்ளைகள் சமூகத்துடன் இணைக்கப்படும் போது அவர்களுக்கு ஏதாவது ஒரு நிதிச் சேமிப்பும், தமக்கென ஒரு சொத்தும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த நிலையங்களில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்கி, ஒவ்வொரு மாதமும்அந்தக் கணக்கில் 5000 ரூபா தொகையை வைப்புச் செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தோம்.
சமூகத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவும் பலவீனமடைந்து வருகிறது. பிள்ளையைப் பிள்ளையாகப் புரிந்துகொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அது எமது பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊