உள்ளூர் செய்திகள்

வேட்பு வேட்புமனுக்கள் நிராகரிப்பிற்கு எதிராக எதிராக சட்டநடவடிக்கை சீறுகின்றது மான்?

  • Mar 21, 2025 - 11:05 PM
  • 0 Comments

எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் கூட்டணியானது பல்வேறு சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மூன்று சபைகளுக்கான வேட்பு மனுக்களும், கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக யாழ்.மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கான […]

உள்ளூர் செய்திகள்

தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு தான் எதிரானவன் அல்லவென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

  • Mar 21, 2025 - 02:22 PM
  • 0 Comments

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை வழங்குங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச […]

உள்ளூர் செய்திகள்

வேட்பு மனுக்கல் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் எம்மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல- அமைச்சர் சந்திரசேகரம்

  • Mar 21, 2025 - 01:55 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்ற வேட்புமனுத் தாக்கலின்போது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு நிராகரிப்பில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சாட்டியமை தொடர்பில் கருத்து வெளிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிலரது குற்றச்சாட்டை பார்க்கிறபோது அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களிற்கு நாங்கள் […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு ஏப்ரல் 03 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

  • Mar 20, 2025 - 03:28 PM
  • 0 Comments

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அனுராதபுர பெண் வைத்தியர் மீதான பாலியல் வல்லுறவு ; சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

  • Mar 17, 2025 - 05:22 PM
  • 0 Comments

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10-03) ,ரவு பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 34 வயதுடைய பிரதான சந்தேக நபர் ,ன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனை பாராளுமன்ற ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்…! சட்டத்தரணி பாத்திமா சஸ்னா

  • Mar 17, 2025 - 11:38 AM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சமீபகாலமாக பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் பெண்களுக்கு எதிரான பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அது தொடர்பில் அவருக்கு எதிரான கண்டங்கள் அதிகரித்து வரும் நிலையில். அவர் தொடர்பிலும் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான பாத்திமா சஸ்னா தனது கண்டனத்தினை தெரித்துள்ளார். அவருடைய கருத்து இவ்வாறு அமைந்துள்ளது… பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களினால், ஒரு பெண்னை அவமதிக்கும் வகையில் “விபச்சாரி” (Prostitute) என்ற தரக்குறைவான வார்த்தை பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்டமை மிகவும் வேதனையளிக்கின்றது. பெண்களுக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

  • Mar 17, 2025 - 08:14 AM
  • 0 Comments

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (20-03-2025) வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுப்பத்திரங்களையும், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. தேர்தல் பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ள அரச உத்தியோகஸ்த்தர்கள் தவறாமல் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அனுராதபுர பெண் வைத்தியருக்கு நீதி கிட்டுவது போன்று இசைப்பிரியாக்கு நீதி கிடைக்காதது ஏன் என சாணக்கியன் எம்பி கேள்வி

  • Mar 16, 2025 - 06:51 AM
  • 0 Comments

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இசைப்பிரியா உயிருடன் இருந்தமைக்கான சாட்சியங்கள் பல வெளியாகின. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த இசைப்பிரியாவின் புகைப்படங்கள் வெளியாகின. பின்னர் ஆடையின்றி இருக்கும் காணொளிகள் வெளியாகின. இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா, ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பெண்கள் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் இவர்களுக்கு ஏன் நீதி வழங்க முடியாதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (15-03-2025) […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கடற்தொழில் அமைச்சரை தமிழ் இளைஞர்கள் சுற்றிவளைத்ததால் பரபரப்பு

  • Mar 14, 2025 - 09:19 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை – பொன்னாலை வீதி புனரமைப்பு பணிகளுக்காக கடந்த அரசாங்கம் நிதி ஒதுக்கி இருந்து, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது , மீள அப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை தேசிய மக்கள் சக்தியினர் தாம் புதிதாக புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதாக காட்டுகின்றனர் என கூறியே அப்பகுதி இளைஞர்கள் கடற்றொழில் அமைச்சருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பொன்னாலை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தொடர் கொலைகளில் மற்றொன்று காலியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

  • Mar 14, 2025 - 08:39 PM
  • 0 Comments

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் இடம்தோட்டை பகுதியில் இன்று மாலை ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் காயமடைந்த நபர் பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை, அத்துடன் சந்தேக நபர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp