உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கு வந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர்..!

  • Mar 23, 2026 - 11:57 AM
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா (Masato Kanda) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு 11.40 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்த அவரை (Masato Kanda) நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விமான நிலையத்தில் வரவேற்றார். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான தருணத்தில் தான் இங்கு வருகை தந்துள்ளதாகவும் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், தொடர்பாடல்களை மேம்படுத்துதல் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பள்ளத்தாக்கிற்குள் விழுந்த மாணவியை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சாரதி..!

  • Mar 20, 2026 - 11:28 AM
  • 0 Comments

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட மாணவர் குழு சுற்றுலா நோக்கில் அந்த பகுதிக்கு சென்றிருந்தது. அப்போது, 23 வயதுடைய மாணவி ஒருவர் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி பள்ளத்தாக்கிற்குள் சரிந்து விழுந்துள்ளார். அந்த வேளையில், மாணவர்களை அழைத்துச் சென்ற நுவரெலியாவைச் சேர்ந்த வாகன சாரதி பிரான்சிஸ், “பொடி மல்லி” என […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை..!

  • Mar 20, 2026 - 09:43 AM
  • 0 Comments

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

14 வயது சிறுவன் அடித்து கொலை

  • Jan 3, 2026 - 11:07 AM
  • 0 Comments

நூரிய பகுதியில், நூரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒரு வீடுக்கு அருகில் 14 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் நேற்று (ஜனவரி 2) வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பிரதேசவாசிகள் சிலர் இதற்கான தகவலை நூரிய பொலீசாருக்கு வழங்கியுள்ளனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்த போது, சிறுவன் உயிரிழந்த நிலையில் தரையில் கிடந்துள்ளார். சிறுவனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சட்டவிரோத தையிட்டி விகாரை கட்டிடத்தை அகற்றுமாறு போராட்டம்

  • Sep 7, 2025 - 05:29 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் பூரணை தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இன்றைய தினமும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாதாள உலக கோஷ்டி கொழும்புக்கு இழுத்துவரப்பட்டனர்

  • Aug 30, 2025 - 08:17 PM
  • 0 Comments

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரகள்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

உள்ளூர் செய்திகள்

யாழ் செம்மணியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன

  • Aug 29, 2025 - 08:04 PM
  • 0 Comments

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் இதுவரை மொத்தம் 187 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 174 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 37வது நாளாக தொடர்ந்தன. இந்த பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

உள்ளூர் செய்திகள்

எதிர்க்கட்சியினரின் AKD கோ கோம் போராட்டம் நேற்று ஆரம்பம்

  • Aug 27, 2025 - 06:50 AM
  • 0 Comments

கொழும்பில் எதிர்க்கட்சி நடத்திய போராட்டத்தில் ஒருவர் பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் அருகே நேற்று (26-08) பிற்பகல் பெரிய மக்கள் கூட்டம் திரண்டது. இதனால் அப்பகுதியில் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ‘ஒடுக்குமுறைக்கு எதிராக’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக சிறையில் வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்நாள் பிரதமர் முன்னாள் ஜனாதிபதியை பார்க்கவில்லை.

  • Aug 26, 2025 - 08:42 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்த்ரீ விக்ரமசிங்க உடன் நேற்று (25-08) அதிகாலை நேரத்தில் சந்தித்ததாக பரவிய செய்திகளை பிரதமரின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மட்டு மேயர் மிரட்டப்பட்டாரா?

  • Aug 21, 2025 - 09:53 PM
  • 0 Comments

மட்டக்களப்பில் ஹர்த்தாலின் போது மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பில் ஹர்த்தால் காரணமாக மாநகர சபை முதல்வரை அவமதிப்பதாக திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகர சபை உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியினரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்றைய  மாநகர சபை அமர்வில், முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் சபை நடைமுறைகளில் அனைத்து முன்மொழிவுகளும் வாசிக்கப்பட்டு, அனுமதிகள் வழங்கப்பட்டன. உறுப்பினர் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp