உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வலி தெற்கில் பிரமாண்ட உள்ளக விளையாட்டரங்கு – அடுத்த வருட இறுதிக்குள் பணிகளை முடிக்க முயற்சி..!

  • Mar 24, 2026 - 12:20 PM
  • 0 Comments

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படுவது தொடர்பில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர்கள் , எமது பிரதேச விளையாட்டுத்துறை சார்ந்தோர் , துறை சார் வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி முதல் கட்ட வரைவு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக சிறீதரன் எம்.பி…!

  • Mar 24, 2026 - 10:43 AM
  • 0 Comments

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் நடாத்திய அமரர்களான விநாயகமூர்த்தி, புவனேஸ்வரி ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். ​”ஒரு சமூகத்தின் உண்மையான பலம் அதன் இளைய சமூகத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் சமூகம் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதார வைத்திய அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றார் DR பசுபதி அச்சுதன்..!

  • Mar 24, 2026 - 10:13 AM
  • 0 Comments

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரியாக நேற்றைய தினம் திங்கட்கிழமை( 23.03.2026)வைத்தியர் பசுபதி அச்சுதன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். வைத்தியர் அச்சுதன் இதற்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி அக்காலகட்டத்தில் மேற்படி வைத்தியசாலைகளில் பல அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள்..!

  • Mar 24, 2026 - 09:37 AM
  • 0 Comments

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24.03.2026) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு..!

  • Mar 24, 2026 - 09:32 AM
  • 0 Comments

அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய வெடிப்பு..! டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த பாரிய வெடிப்பைத் தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, வெடிப்புச் சத்தத்தினால் அருகில் உள்ள வீடுகள் கூட அதிர்வடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த வெடிப்புச் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 24, 2026 - 09:28 AM
  • 0 Comments

24.03.2026 மேல், தென், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சலே கைதுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு: புரட்டாதி 25 இல்..!

  • Mar 23, 2026 - 01:30 PM
  • 0 Comments

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஈழம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழீழ வரைபடத்தில் தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய இடமா..?

  • Mar 23, 2026 - 12:44 PM
  • 0 Comments

சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் புத்தளம் மாவட்டம் கூட தமிழர்களின் இடமா?” – இவ்வாறான கேள்விகளை இன்று நாம் பரவலாகக் கேட்கிறோம். இதற்கான விடை 1799 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கிளேஹார்ன் குறிப்பு (Cleghorn Minute) எனும் வரலாற்று ஆவணத்தில் ஒளிந்துள்ளது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியாகப் பணியாற்றிய Sir Hugh Cleghorn 1799 இல் இலங்கை மக்களின் வரலாறு மற்றும் பரம்பல் குறித்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு விடயம் தமிழ்த் தேசிய […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அனுமதி கிடைத்தவுடன் பேருந்து கட்டணங்கள் அறிவிக்கப்படும்..!

  • Mar 23, 2026 - 12:25 PM
  • 0 Comments

இன்றைய தினம் (23.3.2026) ஒரு சில பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், பல பிரதேசங்களில் பேருந்து சேவைகளில் வீழ்ச்சி காணப்படுவதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா தெரிவித்துள்ளார். அதிவேக வீதிகளின் பேருந்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதால், பயணிகள் சாதாரண வீதிகள் ஊடாகப் பயணிக்க முற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான அனைத்துப் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், தனியார் பேருந்துகளின் எண்ணிக்கையில் பாரிய குறைபாடு நிலவுவதாகவும் அவர் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வைக்கோல் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!

  • Mar 23, 2026 - 12:10 PM
  • 0 Comments

வீரவில, கங்கசிறிகம பகுதியில் நபர் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வீரவில பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம, கங்கசிறிகம பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வயலில் இருந்த வைக்கோலுக்குத் தீ வைத்துள்ள நிலையில், அந்தத் தீ அருகில் உள்ள ஏனைய வயல் பகுதிகளுக்குப் பரவுவதைத் தடுக்க முயன்றுள்ளார். அவர் தீயில் சிக்கிப் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp