செய்திகள்

கடனும் வாங்கவில்லை காசும் அடிக்கவில்லை- விஜித ஹேரத்

  • Oct 29, 2024 - 01:37 PM
  • 0 Comments

    சமூக ஊடகங்களில் அரசு கடன் பெற்றதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன் புதிய நாணயத்தாள்களையும் அச்சிடவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேஇதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டம்.

  • Oct 28, 2024 - 01:40 AM
  • 0 Comments

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் […]

செய்திகள்

சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

  • Oct 26, 2024 - 05:01 PM
  • 0 Comments

.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ரணில் ஏன் குழுவை நியமித்தார் சந்தேகம் வெளியிட்டார்- பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

  • Oct 22, 2024 - 09:19 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் நியமித்த குழுவின் விசாரணைகளின் நம்பகதன்மை குறித்து சந்தேகம் இருப்பதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎன்ஜே அல்விஸ் தலைமையில் குழு அமைத்ததன் உள்நோக்கம் என்னவென மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். ஷானி அபயசேகரவையும் ரவி செனிவிரத்னவையும் அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டதா என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

உலகம்

அமெரிக்காவில் வானொலி கோபுரத்துடன் ஹெலிகொப்டர் மோதி விபத்து 4 பேர் பலி.

  • Oct 22, 2024 - 03:42 PM
  • 0 Comments

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானொலி கோபுரத்தின் மீது ஹெலிகொப்டர் மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறியதோடு தீப்பற்றியுள்ளது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலியானதாக ஹூஸ்டன் மேயர் ஜோன் விட்மயர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது ஒரு சோகமான உயிரிழப்பு ஆகும். விபத்து நடைப்பெற்ற பகுதியில் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் எலிங்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் […]

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதலின் சூத்திரதாரி யாரென உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

  • Oct 21, 2024 - 11:42 AM
  • 0 Comments

  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவே ஈஸ்ட்டர் தாக்குதலின் பிரதானி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் ஆகிய விசாரணை குழுவின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

செய்திகள்

தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளர்கள் வடிவா இருக்கினமா என இன்று காட்டினர்?

  • Oct 19, 2024 - 03:31 PM
  • 0 Comments

தலைமை தாங்கினார் நா.சேனாதிராஜா இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். வன்னிமாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக, முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து. ரவிகரன் டாக்குத்தர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், தே. சிவானந்தராசா ஆசிரியர் பா. கலைதேவன், விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வூதியர் கமலேஸ்வரன் புரொக்கராசி செ. டினேசன், கலீபா ஹலிஸ்ரா ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். இதில யார் குளத்தில் வீடு கட்டியவர்கள் என்று பாருங்கோ வாக்காளர்களே

செய்திகள்

ரணிலிடம் 13 மஹிந்தவிடம் 15 அரச வாகனங்களாம்

  • Oct 19, 2024 - 01:04 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் பயன்படுத்தும் மேலதிக அரச வாகனங்களை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் வேணடுகோள் விடுத்துள்ளது. அரச வாகனங்களை ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போது; இதுவரை கையளிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 […]

செய்திகள்,தமிழ்செய்திகள்,யாழ்ப்பாணம்செய்திகள், உள்ளூர்

மூன்று நாட்கள் காலக்கெடு வழங்கியது அரசு உதய கம்மன்பிலவுக்கு

  • Oct 16, 2024 - 12:00 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் விசாரணைக்குழு அறிக்கைகள் மறைத்து வைத்திருப்பது குற்றம் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எனவே அவற்றை உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசர்களான இமாம் மற்றும் அல்விஸ் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கைகளை புதிய அரசு 7 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உதய கம்மன்பில […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp