e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d 12 e0ae95e0af88e0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d | Pathivu News செய்திகள்

மட்டக்களப்பில் 12 கைதிகள் விடுதலை

  • Dec 25, 2024 - 01:09 PM
  • 0 Comments

கிறிஸ்மஸ் தினத்தையிட்டு இன்று (25) மட்டக்களப்பு சிறைச்சாலையிலதண்டனை அனுபவித்த 12 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்ற இந்த 12 பேருக்கும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

e0ae9ae0af80e0aea9e0ae95e0af8d e0ae95e0aeaae0af8de0aeaae0aeb2e0aebfe0aeb2e0af8d e0ae9ae0aebfe0ae95e0aebfe0ae9ae0af8de0ae9ae0af88 | Pathivu News செய்திகள்

சீனக் கப்பலில் சிகிச்சை பெற்றவர்களை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி பார்வையிட்டார்

  • Dec 25, 2024 - 12:37 PM
  • 0 Comments

சீனாவின் 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார். பீஸ் ஆர்க் என்ற இந்த கப்பல் டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கையில் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளைகளை வழங்குகின்றார்கள் இதன் ஊடாக இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது […]

e0ae89e0aeb3e0af8de0aeb3e0af81e0aeb0e0aebee0ae9fe0af8de0ae9ae0aebfe0aeaee0aea9e0af8de0aeb1e0aea4e0af8d e0aea4e0af87e0aeb0e0af8de0aea4 | Pathivu News செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

  • Dec 25, 2024 - 10:48 AM
  • 0 Comments

அமைச்சரவை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுவுக்கான சட்டமூலத்தை தயாரிக்க அனுமதியளித்துள்ளது திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

e0ae95e0af81e0aeb5e0af88e0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeaf e0aeb5e0aeaee0af8de0ae9ae0aebee0aeb5 | Pathivu News இந்தியா செய்திகள்

குவைத்தில் இந்திய வம்சாவளி ஊழியர்களை சந்தித்த பிரதமர் மோடி!

  • Dec 24, 2024 - 02:29 AM
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் ஊழியர்களையும் சந்தித்து அவர் பேசினார். அதன்பின் நேற்று இரவு மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டார். மோடியுடன் உரையாடிய இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ஒரு தொழிலாளி, நீங்கள் மருத்துவ விடுமறை […]

e0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8de0ae95e0aeb3e0aeaae0af8de0aeaae0aebfe0aeb2e0af8d e0aeaee0aea4e0af81e0aeaae0aebee0aea9 e0ae89e0aeb1 | Pathivu News செய்திகள்

மட்டக்களப்பில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

  • Dec 23, 2024 - 03:07 PM
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டுப் பிரதேசத்தில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (23) முற்றுகையிடப்பட்டது. இதன்போது, 540,000 மில்லி லீற்றர்கோடா மற்றும் 70000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன இலஞ்சம் வாங்கா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

e0aeaae0ae9fe0af8de0ae9fe0aebfe0aea9e0aebfe0aea4e0af8d e0aea4e0af81e0aeafe0aeb0e0aebfe0aeb2e0af8d e0aea8e0af88e0ae9ce0af80e0aeb0e0aebf | Pathivu News உலகம்

பட்டினித் துயரில் நைஜீரியா 35 குழந்தைகள் உட்பட 67 பேர் பலி

  • Dec 23, 2024 - 01:16 PM
  • 0 Comments

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் […]

e0ae95e0aebee0ae9ae0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae87e0aeb8e0af8de0aeb0e0af87e0aeb2e0af8d e0aea8e0ae9fe0aea4e0af8de0aea4e0aebfe0aeaf | Pathivu News உலகம் செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி!

  • Dec 23, 2024 - 02:33 AM
  • 0 Comments

பாலஸ்தீன நகரமான காசாவை இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 மாத காலமாக குண்டுகளால் துளைத்து வருகிறது. இந்த தாக்குதல்களால் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ள அதே வேளை 107,573 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. இந்நிலையில் நிலையில் வடக்கு காசாவில் 2 மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலியப் […]

e0ae8ee0ae99e0af8de0ae95e0aeb3e0af88 e0aea4e0ae9fe0af81e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0ae85e0aea4e0aebfe0ae95e0aebee0aeb0e0aeae | Pathivu News இந்தியா செய்திகள்

எங்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது-ஜெய்சங்கர்!

  • Dec 23, 2024 - 02:26 AM
  • 0 Comments

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திர சேக ரேந்திர சரஸ்வதி தேசிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. இதில் பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். சுதந்திரத்தை நடுநிலைமையோடு ஒருபோதும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எங்களின் தேசிய நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதைச் செய்வோம். தொடர்ந்து பேசிய அவர், உலகளாவிய அளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் மேல் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது. […]

e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0ae92e0aeb0e0af81 e0aeaee0aebee0aea4e0aea4e0af8de0aea4e0af81e0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News உள்ளூர் செய்திகள்

வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

  • Dec 23, 2024 - 01:29 AM
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகிய இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது அரிசியின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் ஏழைகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை […]

e0ae86e0aeaae0af8de0ae95e0aea9e0af88 e0ae85e0aea4e0aebfe0ae95e0aebee0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae89e0aeb2e0af81e0ae95e0af8d | Pathivu News உலகம்

ஆப்கனை அதிகாலையில் உலுக்கியது நிலநடுக்கம்

  • Dec 22, 2024 - 09:56 AM
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர். தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp