விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமீர்

  • Dec 16, 2024 - 12:14 AM
  • 0 Comments

32 வயதான மொஹமட் அமீர் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இவர் இதுவரையில் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் ‘பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடுவது மிகப்பெரிய கௌரவம். இது ஒரு கடினமான முடிவு, ஆனால் அடுத்த தலைமுறைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்ல இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.’என மொஹமட் அமீர் […]

செய்திகள்

மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல் சேவை ஆரம்பம்

  • Dec 15, 2024 - 11:06 PM
  • 0 Comments

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறு நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும் காங்கேசன்துறை, நாகப்பட்டினம் கப்பல் சேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், இந்தியாவில் சுபம் குறூப் ஒப் கம்பனிஸ் பல்வேறு வியாபார நிறுவனங்களை உள்ளடக்கியதொன்றாகும். குறிப்பாக, தனிமனிதனின் தலைமைத்துவத்தில் […]

உலகம்

கனடாவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சஸ்கட்ச்வான் முதல்வர் கோரிக்கை

  • Dec 13, 2024 - 07:28 PM
  • 0 Comments

கனடிய மக்களின் உற்பத்திகள் மீது வரி விதிப்பது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். கனடாவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்பது குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். ட்ரம்ப் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஓர் அரசாங்கம் நியமிக்கப்படுவது பொருத்தமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். கனடியர்கள் தங்களது தெரிவினை மேற்கொள்ளக்கூடிய ஒர் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும் இதற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் ஸ்கொட் மோ மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்

அநுர அரசால் புறகணிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள்

  • Dec 13, 2024 - 08:11 AM
  • 0 Comments

அமெரிக்க அமைதிப்படை தன்னார்வல ஆசிரியர்கள் கொழும்பில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இவர்கள் இலங்கையில் மாணவர்களுக்கு ஆங்கில மொழியை கற்பிக்கவுள்ளனர் ;கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த இத்தன்னார்வலர்களின் குழுவானது சிங்களம் அல்லது தமிழ், இலங்கையின் கலாச்சாரம் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகியவிடயங்கள் தொடர்பாக இடம்பெற்ற 12 வாரகால தீவிர பயிற்சியினை நிறைவுசெய்துள்ளது அவ்வாறு பயிற்றுவிக்கப்ட்டவர்கள் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் இணைந்து கிராமியப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியினை மேம்படுத்துவதற்காக அவர்கள் எதிர் வரும் இரண்டு […]

செய்திகள்

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் குற்றவாளிகளான கபில, உதயங்கவுக்கு எதிராக அநுர அரசு நடவடிக்கை எடுக்குமா? அமெரிக்கா

  • Dec 13, 2024 - 07:56 AM
  • 0 Comments

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடையை அடுத்து உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோருக்கு எதிராக இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகிய இருவருக்கும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (9) மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும் (10) முன்னிட்டு அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை தடைகளை விதித்துள்ளது. உலகளாவிய ரீதியில் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் குறித்து தகவல் வெளியிட்ட யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.

  • Dec 12, 2024 - 03:31 AM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் பெற்றுக்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண […]

செய்திகள்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் உதவி

  • Dec 9, 2024 - 09:48 PM
  • 0 Comments

ஜப்பானின் தூதுவர் அகியோ இசொமதா, அவசரகால நிவாரணப் பொருட்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் கையளித்தார். நாட்டின் பல பகுதிகளில் அண்மையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்காக இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்த கையளிப்பு நிகழ்வில், இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் மற்றும் ஜப்பான் […]

செய்திகள்

இலங்கையின் கிழக்குத் திசையில் தளம்பல் நிலை உருவாகுவாகின்றது- வானிலை அதிகாரி

  • Dec 7, 2024 - 09:25 AM
  • 0 Comments

எதிர்வரும் தினங்களில் கிழக்கு திசையில் அலைவடிவிலான தளம்பல் நிலையானது கால நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வு கூறியுள்ளார் இது பற்றி அவர் மேலும் கூறுகையில், அடுத்துவரும் சில தினங்களில் கிழக்குக் திசையில் அலைவடிவிலான தளம்பல் நிலை ஒன்று வானிலை நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் தாக்கத்தின் காரணமாக எதிர்வரும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். இதேவேளை […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

  • Dec 6, 2024 - 10:21 PM
  • 0 Comments

    ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல் கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில் கைது மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல வவனியாவில் கொரிய நிறுவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு https://fb.watch/wiUTYwy9YW/

செய்திகள்

ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல்

  • Dec 6, 2024 - 05:53 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே தொடரூந்தில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரை தடியால் தாக்கிவிட்டு, அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்ததாக கூறப்படும் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர், இரு சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டபோதுஇருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்ல மற்றும் விக்டன் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதுகளை […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp