செய்திகள்

சிவமோகன் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட பலர் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கம்

  • Dec 28, 2024 - 08:06 PM
  • 0 Comments

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் சி. சிவமோகனும் கட்pயிலிருநந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியாஇன்று (28) இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கட்சியின் உறுப்பினரான […]

செய்திகள்

இந்திய மீனவர்களுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை – அமைச்சர் சந்திரசேகரன்!

  • Dec 27, 2024 - 10:31 PM
  • 0 Comments

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன்; இன்று (27) தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் […]

செய்திகள்

காதலனுக்கு 41 வயது காதலிக்கு 14 வயது

  • Dec 27, 2024 - 01:26 PM
  • 0 Comments

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய காதலனை கைது செய்வது தொடர்பில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் களுத்துறை, தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. களுத்துறை, பதுரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியே பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி கடந்த 25 ஆம் திகதி அன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதன்போது, சந்தேக நபர் தனது நண்பனுடன் இணைந்து முச்சக்கரவண்டியில் சிறுமியின் […]

இந்தியா செய்திகள்

அண்ணாமலை பரபரப்பு அரசியல் செய்ய விரும்புகிறார் – திருமாவளவன்

  • Dec 27, 2024 - 03:17 AM
  • 0 Comments

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஆதங்கத்துடன் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெள்ளிக்கிழமை (27) காலை 10 மணிக்கு அவரது வீட்டின் முன்பு தன்னை தானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது’ என அவர்அறிவித்துள்ளார். இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி […]

உள்ளூர் செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்த உயிர் அச்சுறுத்தலும் இல்லை!

  • Dec 27, 2024 - 02:57 AM
  • 0 Comments

அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே அண்மையில் தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களில் பேசிய அவர், டிசம்பர் 23 […]

செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

  • Dec 25, 2024 - 10:48 AM
  • 0 Comments

அமைச்சரவை உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுவுக்கான சட்டமூலத்தை தயாரிக்க அனுமதியளித்துள்ளது திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்ளூர் செய்திகள்

தமிழக மீனவர்கள் 17 பேருக்கும் விளக்கமறியல்!

  • Dec 25, 2024 - 01:49 AM
  • 0 Comments

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 17 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இன்று அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த மீனவர்களை இன்று நண்பகல் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்களை எதிர்வரும் 7 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதையும் படியுங்கள்>இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா https://www.youtube.com/shorts/_ufGT4fPF9o?feature=share

செய்திகள்

பயத்தில் உள்ளாரா? மஹிந்த இராஜபக்ஸ

  • Dec 23, 2024 - 09:14 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவு பலமுறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளமை தவறானதொரு தீர்மானமானம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்தார் கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தரப்பினரிடம் அறிக்கை பெற்றுக் கொண்டுள்ளது. […]

செய்திகள்

மட்டக்களப்பில் மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

  • Dec 23, 2024 - 03:07 PM
  • 0 Comments

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டுப் பிரதேசத்தில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (23) முற்றுகையிடப்பட்டது. இதன்போது, 540,000 மில்லி லீற்றர்கோடா மற்றும் 70000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன இலஞ்சம் வாங்கா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

உலகம் செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி!

  • Dec 23, 2024 - 02:33 AM
  • 0 Comments

பாலஸ்தீன நகரமான காசாவை இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 மாத காலமாக குண்டுகளால் துளைத்து வருகிறது. இந்த தாக்குதல்களால் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ள அதே வேளை 107,573 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. இந்நிலையில் நிலையில் வடக்கு காசாவில் 2 மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலியப் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp