உள்ளூர் முக்கிய செய்திகள்

வவுனியாவில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை!

  • Jan 12, 2025 - 10:56 PM
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார். உளுந்து அறுவடை தொடர்பில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2024-2025 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியா மாவட்டத்தில் உளுந்து செய்கை பண்ணப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

  • Jan 12, 2025 - 12:02 AM
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நாளைய தினம் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்வதற்கு போதுமான முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்குமாறு,வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது. இதையும் படியுங்கள்>தந்தை செல்வாவின் நினைவுச்சதுக்கம் […]

உள்ளூர் செய்திகள்

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கோரி நுவரெலியாவில் வெடித்த போராட்டம்!

  • Jan 10, 2025 - 11:34 PM
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10.01.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அக்கரப்பத்தனை, மன்றாசி நகர வர்த்தகர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, நகர வர்த்தகர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை […]

முக்கிய செய்திகள்

ரோகிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் என தமிழர் தரப்பு கோரிக்கை

  • Jan 9, 2025 - 06:03 PM
  • 0 Comments

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகட்த்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று (9) முன்னெடுக்கப்பட்டது. கையில் பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்பு போராட்டம் நடத்தப்பட்டது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினரால் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள்,மனித உரிமை பாதுகாவலர்கள் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் இணைந்து […]

முக்கிய செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

  • Jan 9, 2025 - 04:49 PM
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் தேர்தல்கள் தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்திம அபேரத்ன, முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பித்தார். பாராளுமன்றத்தில் (09) நடைபெற்ற அமர்வின் போது சட்டமூல சமர்ப்பண முன்னறிவித்தலின் போது சட்டமூலத்தை சமர்ப்பித்தார். குறித்த சில உள்ளூர் அதிகார சபைகளின் தேர்தல்கள் கோரப்பட்டு பிற்போடப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பில் புதிய நியமனப்பத்திரங்களைக் கோருவதற்காகவும், தேர்தல்களை நடாத்துவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புப்பட்ட அல்லது அதன் […]

முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

  • Jan 9, 2025 - 01:34 PM
  • 0 Comments

; யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பாராளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரத்திற்கு […]

செய்திகள்

வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது பஸ் சங்கங்கள் தீர்மானம்

  • Jan 8, 2025 - 03:46 PM
  • 0 Comments

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (08) தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதில்லை என பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பொலிஸாரின் வரம்பு மீறல் மற்றும் தேவையற்ற அழுத்தங்களை பஸ்கள் மீது பிரயோகிப்பதை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க பஸ் சங்கங்கள் தீர்மானித்திருந்தன […]

செய்திகள்

இளங்குமரன் எம்பியால் பிடிக்கப்பட்ட கனரக வாகனம் சுண்ணக்கற்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளது

  • Jan 8, 2025 - 11:43 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் சுண்ணக்கற்களுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்களை சுண்ணக்கற்களுடன் சாவகச்சேரி நீதிமன்று பிணையில் விடுவித்துள்ளது. தென்மராட்சி பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்தனர் இந் நிலையில், கடந்த வியாழக்கிழமை சுண்ணக்கற்களுடன் பயணித்த கனரக வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார். அதனை தொடர்ந்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் , குறித்த வழக்கின் மீதான விசாரணைகள் நேற்று (07) மன்றில் […]

செய்திகள்

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

  • Jan 8, 2025 - 10:59 AM
  • 0 Comments

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரூந்து சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது இன்று (08) இது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றையதினம் பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார். அத்தோடு, இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 […]

செய்திகள்

சமூக வலைத்தளங்களை நம்பி தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம்

  • Jan 8, 2025 - 08:52 AM
  • 0 Comments

சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளை நம்பி உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அதன் பாவனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp