செய்திகள்

கிராம உத்தியோகத்தரை போட்டு பிடித்த வாழைச்சேனை மக்கள்

  • Dec 23, 2024 - 03:00 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, பிரதேச செயலகத்தின் முன்பாக உத்தியோகத்தர்கள் இன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20ஆம் திகதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கிராம உத்தியோகத்தர் சிலரால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்தவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லையென கோரியே அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  

உள்ளூர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் அதன் இருப்புக்களில் கை வைக்கும் மத்திய அரசு

  • Dec 23, 2024 - 12:37 PM
  • 0 Comments

யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால்; திறந்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. […]

செய்திகள்

நத்தார் தினத்தையிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு அமுல்

  • Dec 23, 2024 - 12:02 PM
  • 0 Comments

பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதார் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் 6,500 இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனதுங்க தெரிவித்துள்ளார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த பேச்சாளர், தேவைப்பட்டால் இராணுவத்தினரிடம் அல்லது ஏனைய பாதுகாப்புப் படையினரின் உதவியை பொலிஸார் நாடுவார்கள் என மேலும் […]

உள்ளூர் செய்திகள்

அனலைதீவையும் அபிவிருத்தி செய்வதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி!

  • Dec 23, 2024 - 02:08 AM
  • 0 Comments

கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் அனலைதீவும் அபிவிருத்தி செய்யப்படுமென பிரதேசவாழ் மக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர். அதன்போது அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், சமூக மட்டங்களில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் மக்களால் அமைச்சரிடம் எடுத்துக்கூறப்பட்டது. அனலைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தாம் அறிந்துவைத்துள்ளதாகவும், குறிப்பாக […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் விளக்கம்!

  • Dec 23, 2024 - 01:44 AM
  • 0 Comments

2022 முதல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையான தனது ஆட்சிக் காலத்தில் பொதுப் பிரதிநிதிகளின் மருத்துவ உதவிக்கான தனிப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதி நிதியத்தின் நிலையான நிர்வாக நடைமுறைகளின் கீழ் வழங்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் தெளிவுபடுத்தியுள்ளார். அவர்களில் ஒருவரை தவிர, எவரும் 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி உதவியைப் பெறவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும், குறித்த அறிக்கையில் தமது பதவிக் காலகட்டத்தில் செய்யப்பட்ட பல குறிப்பிடத்தக்க கொடுப்பனவுகளையும் […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 22.12.2024

  • Dec 23, 2024 - 12:25 AM
  • 0 Comments

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடகிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள் நோர்வே தூதுவர் பிரதமரை சந்தித்தார்   https://youtu.be/WKOY0revRak

உள்ளூர்

மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன்

  • Dec 22, 2024 - 09:30 AM
  • 0 Comments

மாவை சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ள முடிவில் மாற்றம் செய்யக்கூடாதென்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இராஜினாமா செய்துவிட்டு, இரண்டு மாதங்களின் பின்னர் அதனை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டு முற்திகதியிடப்பட்ட கடிதத்தை அனுப்பிவைப்பதனால் அதனை ஏற்க முடியாது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவியில் மாவை சோ.சேனாதிராஜா நீடிப்பதை அங்கீகரிப்பதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கும் பொருட்டு எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியாவில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கடந்த 14 ஆம் திகதி […]

உள்ளூர்

கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள்

  • Dec 22, 2024 - 08:23 AM
  • 0 Comments

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர் கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 37, 46 மற்றும் 53 வயதுடைய கெலன்பிந்துவௌ, பலாங்கொடை மற்றும் வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி) 21.12.2024

  • Dec 22, 2024 - 02:18 AM
  • 0 Comments

அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது- வெளிவிவகார அமைச்சர் பாடசாலைகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இருக்ககூடாது என்கிறார் பிரதமர் இன்று காலை யாழ் செம்மணி பகுதியில் இறந்த நிலையில் முதலை நிதி ஒப்பந்தத்தினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது. ஜேவிபி அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது- சிவாஜிலிங்கம் ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினர் இல்லை- டக்ளஸ் தேவானந்தா கொரிய தூதுவரை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார் https://youtu.be/We2LjCqpMto

செய்திகள்

ரஷ்ய போரில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ் இளைஞர்களை மீட்க கோரிக்கை

  • Dec 21, 2024 - 10:39 PM
  • 0 Comments

வெளிநாட்டு மோகத்தில் முகவர்களை நம்பிய யாழ் இளைஞர்கள் சிலர் ரஷ்ய படையில் கட்டாயமாக இணைக்கப்ட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைக்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் முகவர்களுக்கு பணம் கொடுத்து இலங்கையிலிருந்து சில மாதங்களுக்கு முன்னதாக வெளியேறியிருந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டு உக்ரேனுக்கு எதிரான போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுயனிகாந்த் பகீரதன் மற்றும் அதிஸ்டராஜா மிதுர்ஷன் ஆகியோர் குரல் பதிவு மூலமாக விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp