நீதிமன்றுக்கு முன்னால் சாட்சி மீது வாள் வெட்டு தாக்குதலுக்கு முயன்றவர் கைது
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றுக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த பிரதான சந்தேகநபர் ஒருவர் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வாள்வெட்டு வழக்கு ஒன்றின் சாட்சிக்காக கடந்த மே மாதம் 30 ம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு வந்த நபரை, நீதிமன்றத்துக்கு முன்னால் வைத்து வாளால் வெட்டி தாக்க முற்பட்ட மூவரில் இருவர் அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தலைமறைவாகி இருந்த பிரதான சந்தேகநபர் இன்றையதினம்(02) […]









