e0aea8e0aebfe0aea4e0aebf e0ae92e0aeaae0af8de0aeaae0aea8e0af8de0aea4e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af88 e0ae9ae0aeb0e0af8de0aeb5e0aea4 | Pathivu News செய்திகள்

நிதி ஒப்பந்தத்தினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஆராயவுள்ளது.

  • Dec 21, 2024 - 09:03 PM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, எதிர்வரும் மாதங்களில் கூடி . சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வு கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில் அதன் தொடர்பாடல் திணைக்கள பணிப்பாளர் ஜுலி கோசெக் தெரிவித்துள்ளார் இந்த ஆய்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு நிறைவேற்றக்குழு அதற்கான அனுமதியை வழங்கியவுடன், இலங்கைக்கு மேலும் 333 மில்லியன் டொலர்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் பல்வேறு வரி […]

e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae9ae0af86e0aeafe0aeb2e0aea3e0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0ae9ae0aebfe0aeb1e0af81 | Pathivu News செய்திகள்

ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினர் இல்லை- டக்ளஸ் தேவானந்தா

  • Dec 21, 2024 - 07:58 PM
  • 0 Comments

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை வரவேற்பதாக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் இவ்வாறான செயலணிகளில் இலங்கையின் பல்லினத் தன்மை அவசியம் என அவர் வலியறுத்தினார் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியில், சிறுபான்மையினத்தவர்களின் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லையென சுட்டிக்காட்டி, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள 18 பேர் அடங்கிய இக்குழுவில் சிறுபான்மை இன மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeaf e0ae8ee0aea3e0af8de0aea3e0af86e0aeafe0af8d e0ae95e0af81e0aeb4e0aebee0aeafe0af8d e0ae9ae0af86 | Pathivu News செய்திகள்

இந்திய எண்ணெய் குழாய் செய்தி தவறானது- அமைச்சர் விஜித ஹேரத்

  • Dec 20, 2024 - 11:39 AM
  • 0 Comments

அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, நாட்டில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

e0aeafe0aebee0aeb4e0af8d e0aeaae0af8be0aea4e0aea9e0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae95e0aebee0aeb5e0aeb2e0aebee0aeb3e0aebfe0aeaf | Pathivu News உள்ளூர்

யாழ். போதனாவில் காவலாளியை கடித்து காயப்படுத்தியவர் கைது

  • Dec 20, 2024 - 10:41 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நடைப்பபெற்றுள்ளது மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது. 35 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0aebfe0aeb2e0af8d e0aeaae0aeb0e0aeb5e0aebfe0aeafe0af81e0aeb3e0af8de0aeb3 e0ae8ee0aeb2e0aebfe0ae95e0af8d | Pathivu News உள்ளூர் செய்திகள்

வடக்கில் பரவியுள்ள எலிக் காய்ச்சல் நோய் விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம்!

  • Dec 20, 2024 - 01:49 AM
  • 0 Comments

எலிக் காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட விலங்குகளிலும் பரவக் கூடிய சாத்தியம் உள்ளதாக  வட மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு திருநெல்வேலியில் உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்நோயானது லெப்ற ரோஸ்பைரா எனப்படும் ஒரு வகை பக்டீரியாவினால் ஏற்படுத்தப்படுகின்ற தொற்று நோயாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரில் இப்பக்டீரியாக்கள் வாழும். எலியின் சிறுநீர் […]

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 13 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)19.12.2024

  • Dec 20, 2024 - 12:41 AM
  • 0 Comments

பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குங்கள் கனடாவிடம் சிவஞானம் சிறீதரன் எம்.பி கோரிக்கை சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமையை உறுதிப்படுத்த வேண்டும். அமைச்சரவை பேச்சாளர் மோடியுடன் அநுர மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வெறும் வாய் வாத்தைகளாகவே உள்ளது நெடுந்தீவு – குறிகாட்டுவாகுக்கிடையிலான அம்புலன்ஸ் படகு சேவை தொடரும்-வடக்கு ஆளுநர் வெளிநாட்டுப் படகு 103 பேருடன் முள்ளிவாய்க்கால் கடலில் கரையொதுங்கியுள்ளது https://youtu.be/Q4nCtRdap-Y

e0aeaee0af8be0ae9fe0aebfe0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0ae85e0aea8e0af81e0aeb0 e0aeaee0af80e0aea9e0aeb5e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d | Pathivu News செய்திகள்

மோடியுடன் அநுர மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வெறும் வாய் வாத்தைகளாகவே உள்ளது

  • Dec 19, 2024 - 09:38 PM
  • 0 Comments

மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்திய பிரதமருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை, உடன்படிக்கையில் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப் பட்டாலும், மீனவர்கள் குறித்து அவர் தெரிவித்த விடமயம் எழுத்து வடிவில் இல்லை. வெறும் கலந்துரையாடலாகவே அமைந்துள்ளன’ இவ்வாறு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.  

e0ae9ae0ae9ce0aebfe0aea4e0af8d e0aeaae0aebfe0aeb0e0af87e0aeaee0aea4e0aebee0ae9ae0aeb5e0aebfe0aea9e0af8d e0ae95e0aeb2e0af8de0aeb5e0aebf | Pathivu News செய்திகள்

சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமையை உறுதிப்படுத்த வேண்டும். அமைச்சரவை பேச்சாளர்

  • Dec 19, 2024 - 09:24 PM
  • 0 Comments

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டம் போலியானதல்ல. ஆனால் அவரால் தற்போது அதனை நிரூபிக்க முடியாதுள்ளது. அதன் காரணமாகவே அவர் பதவி விலகினார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கல்வி தகைமையை நிரூபிக்குமாறு மாத்திரமே சவால் விடுக்கப்பட்டது. அவர் தனது பிறப்பு பதிவு சான்றிதழை சமர்ப்பித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில் சபை அமர்வின் போது அவர் சான்றிதழை காண்பித்திருந்த போதிலும், ஹன்சாட்டில் உள்வாங்குவதற்காக அவர் அதனை சமர்ப்பிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் தனது சான்றிதழை சமர்ப்பித்ததன் பின்னர் […]

e0aeaae0af8ae0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0af8de0ae95e0af82e0aeb1e0aeb2e0af88 e0ae85e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0aeae | Pathivu News செய்திகள்

பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குங்கள் கனடாவிடம் சிவஞானம் சிறீதரன் எம்.பி கோரிக்கை

  • Dec 19, 2024 - 06:55 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்க வேண்டாமென அவர் சுட்டின்னாட்டியுள்ளார் சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமைய வேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்ப்பாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கனடிய வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் உள்ளிட்ட கனடிய அரசியல் தரப்பினருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒட்டாவாவில் […]

e0aea8e0af86e0ae9fe0af81e0aea8e0af8de0aea4e0af80e0aeb5e0af81 e0ae95e0af81e0aeb1e0aebfe0ae95e0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0aeb5 | Pathivu News உள்ளூர்

நெடுந்தீவு – குறிகாட்டுவாகுக்கிடையிலான அம்புலன்ஸ் படகு சேவை தொடரும்-வடக்கு ஆளுநர்

  • Dec 19, 2024 - 01:35 PM
  • 0 Comments

நெடுந்தீவுக்கான ஹியூமெடிக்கா நிறுவனத்தால் நடத்தப்படும் அம்புலன்ஸ் படகுச்சேவை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது ஒவ்வொரு மாதமும் 15 இலிருந்து 20 நோயாளர்கள் வரை இவ்வாறு அம்புலன்ஸ் படகுச்சேவை மூலம் கொண்டுவரப்படுகின்றார்கள். இவ்வாறான சேவையை முன்னெடுக்கும் ஹியூமெடிக்கா நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்தார். இதேவேளை கடற்படையினராலும் தற்போது அம்புலன்ஸ் படகுச்சேவை நடத்தப்பட்டு வருகின்றதனை குறிப்பிட்ட ஆளுநர் அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார்.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp