உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பொலிசார் நினைத்தவுடன் கைது செய்ய முடியாது..!

  • Mar 26, 2026 - 09:27 AM
  • 0 Comments

பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டப்பிரிவுகளின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

பாடசாலை நேரத்தில் மாற்றமில்லை. கல்வியமைச்சு

  • Jan 3, 2026 - 11:19 AM
  • 0 Comments

2026 பாடசாலை நேரம் மாற்றமில்லை – கல்விச் சீர்திருத்தம் தரம் 1 மற்றும் 6 மாணவர்களுக்கு அமுல்படுத்தப்படும் கல்வி அமைச்சு, 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர அட்டவணை மற்றும் ஆசிரியர் பயன்பாட்டைச் சீர்திருத்தும் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை நேரம் தற்போதைய நடைமுறையைப் பின்பற்றி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொடரும். மேலும், கல்விச் சீர்திருத்தம் 2026 ஆம் ஆண்டிலிருந்து தரம் 1 மற்றும் […]

இந்தியா உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் வழமை போன்று கடிதம் எழுதியுள்ளார்

  • Nov 4, 2025 - 10:34 AM
  • 0 Comments

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய அரசாங்கம் தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை கடற்படை நேற்று 3ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களின் மூன்று மீன்பிடி படகுகளையும் கைது செய்துள்ளது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் தனித்த சம்பவமாக கைது செய்யப்பட்டனர் எனவும் ஸ்டாலின் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

  • Nov 3, 2025 - 10:34 PM
  • 0 Comments

இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின் ரோந்து கப்பல்கள் இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான மூன்று இயந்திரப் படகுகளை இடைமறித்தபோது நிகழ்ந்தது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மூன்று படகுகளும் மீன்பிடி உபகரணங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 31 பேர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள நான்கு பேர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட […]

உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியில் விஷேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

  • Nov 3, 2025 - 07:55 AM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான நிலைய சுற்றிவளைப்பை தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அதிகாரிகள் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஐந்து (05) ஆண் மற்றும் ஐந்து (05) பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள சுடலைக்குளம் பிரதேசத்தில், அதிகாரிகள் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்தபோது, அங்கு வந்த குழுவொன்று இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகளை பயன்படுத்தி அதிகாரிகளைத் […]

ஆசிரியர் கருத்துக்கள் கட்டுரை

இலங்கை–இந்தியா மின்கம்ப இணைப்பு: எதிர்கால சக்தியின் புதிய திசை

  • Nov 2, 2025 - 11:13 AM
  • 0 Comments

இலங்கை தற்போது மின்சாரத் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான மின்கம்ப இணைப்பு திட்டம், கடந்த வாரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. இது வெறும் தொழில்நுட்பத் திட்டமல்ல; இரு நாடுகளின் உறவையும், ஆற்றல் பாதுகாப்பையும், பொருளாதார நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் முக்கிய முயற்சி ஆகும். இந்த இணைப்பு நிறைவேற்றப்பட்டால், இந்திய மின் வலையமைப்புடன் இலங்கை நேரடியாக இணைக்கப்படும். அதாவது, ஒரு நாடு மின் பற்றாக்குறையில் சிக்கினாலும், மற்றொரு நாட்டிலிருந்து உடனடி மின் வழங்கல் சாத்தியமாகும். […]

இலங்கை–இந்தியா மின்கம்ப இணைப்பு: எதிர்கால சக்தியின் புதிய திசை

  • Nov 2, 2025 - 09:09 AM
  • 0 Comments

இலங்கை தற்போது மின்சாரத் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவுடனான மின்கம்ப இணைப்பு திட்டம், கடந்த வாரம் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. இது வெறும் தொழில்நுட்பத் திட்டமல்ல; இரு நாடுகளின் உறவையும், ஆற்றல் பாதுகாப்பையும், பொருளாதார நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் முக்கிய முயற்சி ஆகும். இந்த இணைப்பு நிறைவேற்றப்பட்டால், இந்திய மின் வலையமைப்புடன் இலங்கை நேரடியாக இணைக்கப்படும். அதாவது, ஒரு நாடு மின் பற்றாக்குறையில் சிக்கினாலும், மற்றொரு நாட்டிலிருந்து உடனடி மின் வழங்கல் சாத்தியமாகும். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் 800 மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுகின்றதென சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது

  • Nov 2, 2025 - 07:43 AM
  • 0 Comments

இலங்கையில் மருத்துவ நிபுணர்கள் (Consultants) பற்றாக்குறை கடுமையாக நீடித்தாலும், பொதுமருத்துவ அதிகாரிகள் (Medical Officers) பணி நிலை முழுமையாக நிரம்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை மருத்துவர்களை நாடு திரும்பி சேவையை மீண்டும் தொடங்குமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸா சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். நிபுணர் நிலைகளில் கடும் குறைவு சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் அர்ஜுன திலகரத்ன ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் கூறியதாவது: ‘நிபுணர் துறையில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் பெரும் போதைப் பொருள் வேட்டை – ரூ.4 கோடி பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

  • Nov 1, 2025 - 07:36 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சுமார் ரூபா 4 கோடி பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினர் கவனித்து, அதை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அந்த படகின் உள்ளே சுமார் 185 கிலோகிராம் எடையுடைய கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் ரூ.41 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீட்கப்பட்ட கஞ்சா, படகு மற்றும் கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கெஹேலிய ரம்புக்வெல்லாவின் புத்தா 270 கோடி சொத்தை மறைத்ததாக வழக்கு தாக்கல்

  • Sep 14, 2025 - 08:31 AM
  • 0 Comments

ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லாவின் மகன் ரமித் ரம்புக்வெல்லாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை கொழும்பு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது. ரமித் ரம்புக்வெல்லா 270 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துக்களின் மூலத்தை வெளிப்படுத்தாத குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அந்த காலகட்டத்தில் அவர் தந்தையின் தனிச்செயலாளராகவும் பணியாற்றியிருந்தார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோதமாக செல்வத்தை குவித்ததாக ஊழல் தடுப்பு ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp