முக்கிய செய்திகள்

முன்னாள் போராளியொருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் ஆரம்பித்துள்ளார்

  • Feb 14, 2025 - 06:42 PM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14) காலை ஆரம்பித்துள்ளார். ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி அழகரெத்தினம் வனகுலராசா இன்றைய தினம் காலை 7 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் நீர், உணவு உட்கொள்ளாமல், நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.   அவர் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை மட்டுமன்றி உலக […]

முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலங்கள் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்

  • Feb 14, 2025 - 06:24 PM
  • 0 Comments

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலத்தின் இரண்டு வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுவதால் அவை விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் சட்டமூலத்தின் ஏனைய வாசகங்களை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாராளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதன்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் சபைக்கு வருமாறு அறிவித்தார். அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு மூன்று நீதியரசர்கள் கொண்ட குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட […]

முக்கிய செய்திகள்

குரங்கா மந்தியா மின்தடையை ஏற்படுத்தியது என அமைச்சர் பதிலளிக்க வேண்டுமென எதிர்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் கோரிக்கை

  • Feb 14, 2025 - 05:51 PM
  • 0 Comments

கடந்த வாரத்தில் ஏற்பட்டதை போன்று இந்த ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக தெரியவருகிறது. அதனால் இதுதொடர்பில் மின்சக்தி அமைச்சர் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இடம்பெறுமா? இங்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் […]

முக்கிய செய்திகள்

அதானிகுழுமத்துடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகின்றதா?

  • Feb 14, 2025 - 05:23 PM
  • 0 Comments

காற்றாலை மின்திட்டம் குறித்து இந்தியாவின் அதானிகுழுமமும் இலங்கை அரசாங்கமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகிக்கொள்வதாக அதானி குழுமம் உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கமும் அதானிகுழுமமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன இதன் மூலம் காற்றாலை மின் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முற்றாக பூர்த்தியாகவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இருதரப்பும் அடுத்தவாரம் மூடியகதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமா என […]

முக்கிய செய்திகள்

வடமாகாணத்திற்கு இரவு தபால் தொடரூந்து சேவை இன்று தொடக்கம் ஆரம்பம்

  • Feb 14, 2025 - 05:11 PM
  • 0 Comments

வடக்குக்கான இரவு தபால் தொடரூந்து; சேவை இன்று முதல் மொரட்டுவை தொடரூந்து; நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் என தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

வெளிப்படைத்தன்மையுடைய அனைவருக்கும் சமமான வரி கொள்கை இலங்கையில் இல்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது

  • Feb 14, 2025 - 07:05 AM
  • 0 Comments

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை ஒன்றை மேற்கொள்வது வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு மிகவும் பரந்துபட்ட பின்புலத்தை உருவாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு மனித வளத்தை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுக்குழுவினர் கடந்த புதன்கிழமை (12-02-2025) தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த பெர்ணாந்துவை தொழில்அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டின் மனிதவள மேம்பாட்டு செயல்முறைக்கு திறம்பட பங்களிக்க […]

முக்கிய செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் உள் விவகா ரங்களில் தலையிடுகின்றார் என சரத் வீரசேகர குற்றச்சாட்டு

  • Feb 14, 2025 - 06:43 AM
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். போராட்ட காலப்பகுதியிலும் அவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையில் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் […]

முக்கிய செய்திகள்

ஜேவிபி கட்சிக்க வருடம் 60 கோடி ரூபா வைப்பிலிடப்பட்டு வருகின்றதென தயாசிறி தெரிவித்துள்ளார்

  • Feb 14, 2025 - 06:34 AM
  • 0 Comments

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான தினத்தை அறிவிக்க முன்னர் வரவு – செலவு திட்டம் விவாதம், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் மற்றும் தமிழ் – சிங்கள புத்தாண்டு உள்ளிட்ட காரணிகளை கவனத்தில் கொண்டு தீர்மானமொன்றை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் கூட்டணி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தயாசிறி ஜயசேகர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் […]

முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி ஏழ்மையான கட்சி என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்

  • Feb 14, 2025 - 06:22 AM
  • 0 Comments

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேர்மறையான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். ஐ.தே.க. மாத்திரமின்றி சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும். எந்த கூட்டணி அமைக்கப்பட்டாலும் சஜித் பிரேமதாசவே அதன் தலைவராவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நேற்று (13-02-2025) தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் […]

முக்கிய செய்திகள்

உக்ரைனுக்கு ரஸ்யா அடிப்பதை வேடிக்கை மட்டும் பார்த்த இலங்கைக்கு ரஸ்யா பாராட்டு தெரிவித்துள்ளது

  • Feb 13, 2025 - 04:40 PM
  • 0 Comments

ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பமாகி மூன்றுவருடங்களாகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் இலங்கை பின்பற்றிய அணிசேரா கொள்கையை ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன்வரவேற்றுள்ளதுடன் புதிய அரசாங்கமும் இதேகொள்கையை பின்பற்றும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ரஸ்ய ஜனாதிபதிகளிடையிலான பேச்சுவார்த்தை இந்த மோதல் முடிவிற்கு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp