பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவனின் ‘வீட்டை காணொளியாக பதிவு செய்தவருக்கு விளக்கமறியல்
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரின் மனைவியின் வீட்டை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி நீதவான் ரன்திக லக்மாலி நேற்று (27-02-2025) உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் நீதிமன்றி்ல ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் துபாயில் உள்ள ‘சமீர்’ […]









