செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நீதியமைச்சர்

  • Dec 16, 2024 - 04:57 PM
  • 0 Comments

பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுயவிபரக் கோவையில் உறுப்பினர்களின் கல்வித் தகைமை மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.

செய்திகள்

இலங்கை ஜனாதிபதியை இந்திய ஜனாதிபதி, பிரதமர் வரவேற்பு

  • Dec 16, 2024 - 11:38 AM
  • 0 Comments

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை இன்று திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இணைந்து வரவேற்றனர். இந்த சம்பிரதாயபூர்வ வரவேற்பானது புது டில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.  

உள்ளூர் செய்திகள்

இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்!

  • Dec 16, 2024 - 03:11 AM
  • 0 Comments

வலய பாதுகாப்பு தொடர்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவாலுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள்இ வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்இ தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

  • Dec 16, 2024 - 03:01 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின் போது இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் விவசாயத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உறுதியளித்துள்ளார். இதேவேளை, கடற்றொழில் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாடு ,தனித்துவமான துறைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் , இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(15.12.2024 )

  • Dec 16, 2024 - 01:07 AM
  • 0 Comments

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு  மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல் சேவை ஆரம்பம் யாழில் எலிக்காய்ச்சலால் 23 வயது இளைஞன் பலி! மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே  இலங்கையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்படும் என்கிறார் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் https://youtu.be/2svXrqbsfvc

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமீர்

  • Dec 16, 2024 - 12:14 AM
  • 0 Comments

32 வயதான மொஹமட் அமீர் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இவர் இதுவரையில் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் ‘பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடுவது மிகப்பெரிய கௌரவம். இது ஒரு கடினமான முடிவு, ஆனால் அடுத்த தலைமுறைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்ல இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.’என மொஹமட் அமீர் […]

உலகம்

அமெரிக்காவில் இனி நேர மாற்றம் இல்லை- டொனல்டு டிரம்ப்

  • Dec 15, 2024 - 11:53 PM
  • 0 Comments

அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பகல் சேமிப்பு நேரம் (னுயலடiபாவ ளுயஎiபெ வுiஅந-னுளுவு) என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட கோடைகாலங்களில் பகல்நேரத்தை அதிகரிக்க ‘பகல் சேமிப்பு நேரம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது கோடைக்காலம் துவங்கும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை முன்னோக்கி நகர்த்தி வைப்பர். இதன் மூலம் அதிகமான பகல் நேரம் கிடைக்கும். பின்னர் கோடைகாலம் முடியும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை பின்னோக்கி நகர்த்தி வைப்பர். இதன்படி அமெரிக்காவில் மார்ச் மாதம் 2 ஆவது […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையின் அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்படும் என்கிறார் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர்

  • Dec 15, 2024 - 11:30 PM
  • 0 Comments

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்த போது;. இதனைக் குறிப்பிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக இந்த நாட்டு அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்துள்ள பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவேன் எனவும், எதிர்காலத்திலும் அதனைத் தொடரப் போவதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு கடந்த தேர்தலில் பெரும் ஆணை வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் காலப்பகுதி சவாலானதாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். […]

செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்பு விலக்கப்பட்டது குமுறுகிறார் -மனோஜ் கமகே 

  • Dec 15, 2024 - 11:14 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அநுரகுமார திசாநாயக்க, தற்போது ஜனாதிபதியானதன் பின்னர் அதனை மறந்துவிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த தீர்மானத்தை மீளப்பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் கொழும்பு மாவட்ட உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரச வரப்பிரசாதங்களை […]

செய்திகள்

காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு ;

  • Dec 15, 2024 - 10:59 PM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினா இங்கு உரையாற்றிய சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ் மாவட்டத்தில் இராணுவ பிடியில் காணி விடுவிப்பதற்கு கால எல்லையை நிர்ணயிக்க முடியுமா? ஒரு கால எல்லையை நிர்ணயித்து செயல்படும்போதுதான் அதற்கான வேலைத்திட்டங்களை செயல்படுத்த முடியும். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் காணி விடுவிப்பு வெகு விரைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp