உள்ளூர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து நடைபெறாது- நெடுந்தீவு பிரதேச செயலகம்

  • Nov 25, 2024 - 11:01 AM
  • 0 Comments

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று (25) காலை முதல் மறு அறிவித்தல்; வரை சீரற்ற காலநிலையே காரணமாக நடைபெறதென நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது நெடுந்தீவு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது சீரற்ற காலநிலையே இதற்கு காரணமாகும்.

செய்திகள்

பிரபாகரனை போடுறதுக்கு வாங்கின கடனை எப்படி கட்டப்போறியல் சொல்லுங்கோ- பாட்டலி சம்பிக்க ரணவக்க

  • Nov 25, 2024 - 07:36 AM
  • 0 Comments

தேசிய மற்றும் சர்வதேச கடன்கள் அரசாங்கத்துக்கு பாரிய சவால். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் அரசின் நிதி நிலைமை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு […]

உள்ளூர்

மன்னார் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

  • Nov 25, 2024 - 07:04 AM
  • 0 Comments

வெள்ள நீரை வெளியேற்ற கோரிதலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்; நடத்தியுள்ளனர் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி நேற்று (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாவிலுப்பட்டான் கிராமத்தில் 108 குடும்பங்கள் வசித்து வருகின்றாhர்கள் பாவிலுப்பட்டான கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை […]

செய்திகள்

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் கொழும்புக்கு செல்ல இந்நாள் கடற்றொழில் அமைச்சர் யாழ்ப்பாணம் வருகை

  • Nov 24, 2024 - 02:52 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் செய்து, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்றொழில் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளாhர் நேற்று (23) யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் பார்வையிட்டார். வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்தார் அத்துடன் வைத்தியசாலையில் சாதகமான மாற்றங்களை […]

செய்திகள்

ரணிலின் பாதையில் செய்ய அநுர சம்மதித்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது

  • Nov 24, 2024 - 01:26 PM
  • 0 Comments

அநுர அரசானது சர்ச்சைக்குரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க சம்மதித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார் கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பெறப்பட்ட நான்கு வருட கடனை தொடர்ந்தும் வழங்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லையென பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டினார். புதிதாக […]

உள்ளூர்

தமிழ் மக்கள் பேரவையின் மாதிரி வரைபை அடிப்படையாக வைத்து பேச தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Nov 24, 2024 - 01:12 PM
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையானது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டுமென அவர் நிபந்தனை விதித்துள்ளார இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளது. புதிய அரசானது அடுத்துவரும் காலப்பகுதியில் புதிய […]

செய்திகள்

இந்தியா இலங்கையில் அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம்

  • Nov 24, 2024 - 12:59 PM
  • 0 Comments

அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் அரசின் பொருளாதார மூலோபாயத்தின் அடிப்படையில் கொடுக்கல் – வாங்கல்களில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் உலகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற நட்பு நாடு என்ற வகையில் சீனா மீது அன்பு உள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர குறிப்பிட்டார். இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். இலங்கையின் பொருளாதார மேம்பாட்டின் அடிப்பைடயில் இந்தியாவுடன் எமது கொடுக்கல் – வாங்கல்கள் […]

உள்ளூர் செய்திகள்

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணையுமாறு அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

  • Nov 23, 2024 - 08:32 AM
  • 0 Comments

அரசியலமைப்பையும் சட்டங்களையும் விட மக்களின் அதிகாரம் பலமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பையும் சட்டங்களையும் விட மக்களின் அதிகாரம் பலமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைகளின் கட்டமைப்பு மற்றும் வடிவங்களைப் பார்க்கும் போது மக்களின்; எதிர்பார்ப்புக்கள் பிரதிபலிக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு அரசியல் தலைமைத்தவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் தனக்கு கிடையாது என அநுரகுமார தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தில் அரச சேவையின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை […]

உள்ளூர் செய்திகள்

சீனா 1888 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கின்றது

  • Nov 23, 2024 - 08:14 AM
  • 0 Comments

வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் வகையில் சீனா 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியினை இலங்கை;கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன் கீழ் வறிய குடும்பங்களுக்கு 1,888 வீடுகளும் 108 வீடுகள் மூத்த கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளது அதற்கான ஒப்பந்தம் நேற்று (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் கலாநிதி […]

உள்ளூர் செய்திகள்

யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

  • Nov 23, 2024 - 01:13 AM
  • 0 Comments

இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.   சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp