அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நிலைகுலைந்தது இந்திய அணி
சிட்னி விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான தீர்மானம் மிக்க ஐந்தாவதும் கடைசியுமான போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய முதலாம் நாள் ஆட்டத்தில் 194 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட 11 விக்கெட்களில் ஒரு விக்கெட் மாத்திரமே சுழல்பந்துவீச்சாளருக்கு சொந்தமானது. கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய இந்தியாவின் வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியிலிருந்து […]









