உள்ளூர் செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான யாழ் இளைஞன் விளக்கமறியலில்

  • Dec 2, 2024 - 04:05 AM
  • 0 Comments

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் […]

உள்ளூர் செய்திகள்

குருநகரில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கு ஆளுநர் உறுதி.

  • Dec 1, 2024 - 08:25 PM
  • 0 Comments

குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விவசாயம் மற்றும் கடற்றொழில் வட மாகாணத்தின் முக்கியமான தூண்கள்.   இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக யாழ். மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய காலத்தில் பல்வேறு விடயங்களைச் செய்திருக்கின்றேன். அன்றும் […]

உள்ளூர்

தற்காலிக இடைத்தங்கல் நிலையங்களுக்கு அரச அதிபரின் கள விஜயம்

  • Dec 1, 2024 - 06:18 AM
  • 0 Comments

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் நேற்று (30) கேட்டறிந்துக்கொண்டார் யாழ்ப்பாணத்தின் கல்லுண்டாய் பிரதேச வெள்ள நிலமைகளை ஆய்வு செய்து கல்லுண்டாய் தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் கட்டடத்தில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடினார் அதன் போது உடனடியாக தீர்க்க கூடிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் வழங்கினார். இதன் போது அனர்த்தத்திற்கு அப்பால் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சனைக்கு, […]

உள்ளூர்

விலாசம் காட்டிய வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை

  • Nov 27, 2024 - 06:36 AM
  • 0 Comments

தேர்தலில் வாக்களிக்கும் இலத்திரனியல் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டிக்காக 14 வயதுடைய சி.கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார். மாணவன் தயாரித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை அதாவது வாக்கு சீட்டு […]

செய்திகள்

பிரபாகரனை போடுறதுக்கு வாங்கின கடனை எப்படி கட்டப்போறியல் சொல்லுங்கோ- பாட்டலி சம்பிக்க ரணவக்க

  • Nov 25, 2024 - 07:36 AM
  • 0 Comments

தேசிய மற்றும் சர்வதேச கடன்கள் அரசாங்கத்துக்கு பாரிய சவால். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் அரசின் நிதி நிலைமை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (24) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு […]

செய்திகள்

சண்டித்தனம் விடும் நாமல். அநுர அரசு மௌனம்?

  • Nov 25, 2024 - 07:23 AM
  • 0 Comments

அரசியல் களத்தில் சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுக்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் புதிய சட்டமியற்றுவதற்கு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக நாமல் இராஜபக்ஸ தெரிவித்துள்ளார் இராஜபக்ஸ குடும்பத்தினர் மீது தேசிய மக்கள் சக்தி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியே ஆட்சியை பிடித்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளாhர் மஹரக பகுதியில் நேற்று (24) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர்; இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

உள்ளூர்

மன்னார் மக்கள் வீதியை மறித்து போராட்டம்

  • Nov 25, 2024 - 07:04 AM
  • 0 Comments

வெள்ள நீரை வெளியேற்ற கோரிதலைமன்னார் பிரதான வீதியில் உள்ள விலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டம்; நடத்தியுள்ளனர் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பாவிலுப்பட்டான் குடியிருப்பு கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றக் கோரி நேற்று (24) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாவிலுப்பட்டான் கிராமத்தில் 108 குடும்பங்கள் வசித்து வருகின்றாhர்கள் பாவிலுப்பட்டான கிராம மக்கள் தமது கிராமத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை […]

உள்ளூர்

தமிழ் மக்கள் பேரவையின் மாதிரி வரைபை அடிப்படையாக வைத்து பேச தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Nov 24, 2024 - 01:12 PM
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையானது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டுமென அவர் நிபந்தனை விதித்துள்ளார இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளது. புதிய அரசானது அடுத்துவரும் காலப்பகுதியில் புதிய […]

செய்திகள்

இந்தியா இலங்கையில் அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம்

  • Nov 24, 2024 - 12:59 PM
  • 0 Comments

அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் அரசின் பொருளாதார மூலோபாயத்தின் அடிப்படையில் கொடுக்கல் – வாங்கல்களில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் உலகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற நட்பு நாடு என்ற வகையில் சீனா மீது அன்பு உள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர குறிப்பிட்டார். இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். இலங்கையின் பொருளாதார மேம்பாட்டின் அடிப்பைடயில் இந்தியாவுடன் எமது கொடுக்கல் – வாங்கல்கள் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் தொடர் மழையால் 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Nov 23, 2024 - 01:55 AM
  • 0 Comments

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் தென்மராட்சி பிரதேசத்தில் வசிக்கும் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நாவற்குழி அன்னை சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp