செய்திகள்

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர்களை வெளியிடுமாறு ரிஸாட் பதியுதீன்; கோரிக்கை

  • Dec 19, 2024 - 12:33 PM
  • 0 Comments

கொவிட் தொற்றில் மரணித்த ஜனாஸாக்களை எரித்தமை தொடர்பில் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில் எங்களுக்கு திருத்தியானதாக இல்லை. ஜனாஸாக்களை எரித்தவர்கள் தொடர்பில் கோட்டாய ராஜபக்ஸ அதன் பின் ரணில் விக்ரமசிங்க என எவரும் வெளியிடவில்லை ஜனாஸா எரிப்பு தொடர்பான கேள்விக்கான பதிலும் சுகாதார அமைச்சில் இருக்கும் அதிகாரிகள்தான் எழுதிக்கொடுத்திருப்பார்கள். ஆகவே எரித்தவர்களின் பெயர் விபரங்களை தயவுசெய்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்வதாக ரிஸாட் மேலும் தெரிவித்துள்ளாh

உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு: யாழில் நினைவு கூரப்பட்டது.

  • Dec 19, 2024 - 02:48 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு  75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு இன்று யாழ். நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு,இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், […]

உள்ளூர் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்படவேண்டும் – துரைராசா ரவிகரன்

  • Dec 19, 2024 - 02:19 AM
  • 0 Comments

பாராளுமன்றில் சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27 ம் திகதி எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச் செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கைத்தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில் […]

உள்ளூர்

சாவகச்சேரி செயலாளருக்கு என்ன தெரியும்? வர்த்தகர் கேள்வி. காணொளி இணைப்பு

  • Dec 18, 2024 - 09:07 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி செயலாளருக்கு சாவகச்சேரியைப்பற்றி என்ன தெரியும் என சாவகச்சேரி வர்த்தகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்? சாவகச்சேரி நகரசபை செய்லாளர் வர்த்தக நிலையங்களை திறந்த கேள்வி பத்திரம் விடுத்து ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வர்த்தக கட்டிடங்களை கொடுத்தமை தொடர்பிலேயே ஈரண்பாடு எழுந்துள்ளது

செய்திகள்

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது

  • Dec 15, 2024 - 10:52 PM
  • 0 Comments

வவுனியாவில் ஐயப்ப சாமிகள் சபரிமலை யாத்திரைக்காக அவசரகால கடவுச்சீட்டு மற்றும் வீசா, விமான விமான கட்டணம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கோரிக்கையினை முன்வைத்து மகஜர் ஒன்றினை கையளித்தனர். இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர்களை பொறுத்தவரை பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. எனவே இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு ஆதரவாக மற்ற […]

உள்ளூர் செய்திகள்

புதிய சபாநாயகர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை!

  • Dec 15, 2024 - 03:21 AM
  • 0 Comments

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நாட்டில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 13 ஆம் திகதி பிற்பகல் அசோக ரன்வல, சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். […]

செய்திகள்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி போராட்டம்

  • Dec 14, 2024 - 07:52 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று முதல் இன்று சனிக்கிழமை மாலை வரை போராட்டம் இடம்பெற்று வருகிறது. தையிட்டியில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 மாத காலமாக தொடர்ந்த இப்போராட்டம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் […]

செய்திகள்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இரா.சாணக்கியன் கடும் தொனி

  • Dec 14, 2024 - 07:40 PM
  • 0 Comments

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் ஆரும்பமாக இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் வழமையைவிட அதிகமான மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு செயலாளர் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கட்சியின் தலைவர் மாவை […]

செய்திகள்

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் குற்றவாளிகளான கபில, உதயங்கவுக்கு எதிராக அநுர அரசு நடவடிக்கை எடுக்குமா? அமெரிக்கா

  • Dec 13, 2024 - 07:56 AM
  • 0 Comments

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட தடையை அடுத்து உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகியோருக்கு எதிராக இலங்கையின் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேன ஆகிய இருவருக்கும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (9) மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும் (10) முன்னிட்டு அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை தடைகளை விதித்துள்ளது. உலகளாவிய ரீதியில் […]

செய்திகள்

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தொடர்பில் நாளை தீர்மானம்?

  • Dec 12, 2024 - 07:54 PM
  • 0 Comments

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மாவை சோ.சேனாதிராஜா எழுத்துமூலமாக கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கத்துக்கும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் அனுப்பி வைத்திருந்தார். இருப்பினும் குறித்த காலப்பகுதி பாராளுமன்றத் தேர்தல் பிரசாரச் செயற்பாடுகள் தீவிரமடைந்திருந்தமையால் மாவையின் கடிதம் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்றே கட்சியின் நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும், தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் கடந்த நவம்பர் 14ஆம் திகதி மாவை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp