உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

புத்தூர் – சுன்னாகம் வீதி இரண்டு நாட்கள் மூடப்படும்..!

யாழ்ப்பாணம் , சுன்னாகம் – புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K சதுரெனோ அறிவித்துள்ளார்.
சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவை மார்க்கத்தை அவசரமாக திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளதால், மேற்படி கடவை நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி வரை மூடப்படும்

அதனால் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.

மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை