உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வயோதிப தம்பதியினர் படுகொலை..!

ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் அதேபகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பில் வசித்து வருவதுடன், இந்த தம்பதியினர் நீண்டகாலமாக இந்த வர்த்தக நிலையத்தில் வியாபாரம் செய்து வந்த நிலையில், தற்போது கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிள்ளைகள் அவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காமையினால், அயலவர்களுக்கு அறிவித்த நிலையில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்குள் இனந்தெரியாதோர் உட்பிரவேசித்து இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை