“இலங்கையில் மின் கட்டண உயர்வு ரத்து செய்தியுடன் மக்கள் மகிழ்ச்சி காணும் காட்சிகள்” உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

2026 முதல் காலாண்டில் மின் கட்டண உயர்வு ரத்து! மக்களுக்கு நிவாரணம்

  • Jan 14, 2026 - 07:43 PM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 11.57 சதவீதம் அதிகரிக்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும், எனினும் அந்தக் கோரிக்கையை இக்காலாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான கட்டணத் திருத்த முன்மொழிவை கடந்த ஆண்டு […]

இறக்குமதி பால்மா விலை குறைப்பு – 1 கிலோ ரூ.125, 400 கிராம் ரூ.50 குறைவு” உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பால் விலை பாதாளம்… பொதுமக்களுக்கு புதுநாளம்

  • Jan 14, 2026 - 07:24 PM
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அத்துடன் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையை 50 ரூபாவினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் இந்த புதிய விலை அமுலாகும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது

“ஆறாம் தர கல்வி சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை தீர்மானம்” கட்டுரை

ஆறாம் தரம் அடுத்த ஆண்டு… அதிர்வில் கல்வி சீர்திருத்தம்

  • Jan 14, 2026 - 07:15 PM
  • 0 Comments

ஆறாம் தரத்திற்கான புதிய கல்வி சீர்திருத்தங்களை மீளாய்வு செய்து, அவற்றை 2027ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்ட பாடத் தொகுதிகள் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் ஆறாம் தர ஆங்கிலப் பாடத் தொகுப்பில் இடம்பெற்ற பொருத்தமற்ற இணைய இணைப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளின் […]

CID தலைமையகத்திற்கு அருகே கைப்பற்றப்பட்ட ரூ.6.2 மில்லியன் பெறுமதியான ஸ்னைப்பர் துப்பாக்கியை ரூ.200,000 பிணையில் இலங்கை இராணுவத்திடம் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சீ.ஐ.டி. அலுவலகம் அருகே இரு ராணுவ கொமாண்டோக்கள் கையில் சினைப்பருடன் சிக்கினர்.உயர் அதிகாரிகள் இலக்கு.?

  • Jan 14, 2026 - 07:04 PM
  • 0 Comments

குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்திற்கு வெளியே இரு கமாண்டோக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கி வேறு குற்றங்களில் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதவான் கசுன் திசாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச பகுப்பாய்வாளர் பரிசோதனை நிறைவடைந்ததையடுத்து, ரூ.200,000 பிணையில் அந்த ஸ்னைப்பர் துப்பாக்கியை இலங்கை இராணுவத்திடம் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைகளுக்காக தேவையான நேரங்களில் ஆயுதத்தை நீதிமன்றம் பார்வையிடும் வகையில் ஆயுதம் இருக்க வேண்டுமென நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கைப்பற்றப்பட்ட […]

2026 கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முதலாம் தரத்திற்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவிப்பு உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாடசாலை பாதை புதுமை… புதிய கல்வி சீர்திருத்தம் – முதலாம் தரம் 29 இல் ஆரம்பம்

  • Jan 14, 2026 - 06:25 PM
  • 0 Comments

புதிய கல்வி சீர்திருத்தங்களை உள்ளடக்கிய முதலாம் தரத்திற்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை கல்வி கால அட்டவணை தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய கல்வி சீர்திருத்தங்களை உள்ளடக்கிய முதலாம் தரத்திற்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“திருகோணமலை போதிராஜ விஹாரத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பௌத்த பிக்குகள்” உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சிலை வைத்து சிக்கிய பிக்கு சாமியர் – திருகோணமலையில் சட்டம் கேட்ட கேள்வி”

  • Jan 14, 2026 - 06:09 PM
  • 0 Comments

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பாலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பாலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் மேலும் ஐந்து பேர் என மொத்தம் 9 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 16ஆம் திகதி திருகோணமலை போதிராஜ விஹார வளாகத்தில் கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தை மீறி அனுமதியின்றி புத்தர் சிலை […]

“இலங்கை வீதி விபத்துகள் 2026 – சோர்வால் அதிகரிக்கும் மரணங்கள்” உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

“சோர்வு சக்கரத்தில் சாவுப் பயணம் – 14 நாட்களில் 73 உயிர்கள்!”

  • Jan 14, 2026 - 01:59 PM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் 14 நாட்களுக்குள் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 73 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸின் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் நேற்று (13) வரை 68 மரண விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், ஜனவரி 12 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ்பிரதி பொது பரிசோதகர் டபிள்யூ.பி.ஜே. செனதீர ஊடகங்களுக்கு தெரிவித்தார். விபத்துகளுக்கான முக்கிய காரணமாக ஓட்டுநர்களின் அதிகமான சோர்வு […]

“U19 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் – தொடக்க ஆட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதல்” விளையாட்டு

களம் தயார்… கனவு தொடக்கம் – U19 உலகக் கிண்ண நாளை முதல்

  • Jan 14, 2026 - 12:51 PM
  • 0 Comments

19 வயதுக்குட்பட்டவருக்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 1988-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது. இதுவரை 15 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா பட்டம் வென்றது. 16-வது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 2 நாடுகள் இணைந்து நடத்துகிறது.இந்தப் போட்டி நாளை (15- ந் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறு கிறது. […]

ஈரானில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் பொதுமக்கள் – மரண தண்டனை அச்சம், அமெரிக்க எச்சரிக்கை” உலகம்

ஈரானில் எரியும் எழுச்சி – தூக்குத் தண்டனையா? டிரம்பின் கடும் எச்சரிக்கையா?

  • Jan 14, 2026 - 12:23 PM
  • 0 Comments

ஈரானில் அரசாங்கத்தை எதிர்த்த பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படடால அமெரிக்கா மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமென எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, 26 வயது எர்பான் சோல்தானி குறைந்த காலத்துக்குள் மரண தண்டனை பெரும் நிலையில் உள்ளார். மனித உரிமை அமைப்புகள், கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்ட 18,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களின் உயிர் பாதுகாப்புக்கு அதிர்ச்சியுடன் கவலைக் தெரிவித்துள்ளன. போராட்டங்கள் காரணமாக இறந்தோர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 10 கோடி ரூபா தங்க நகைகள் திருட்டு! அழகி கைது

  • Jan 14, 2026 - 08:51 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாநகரம், தாவடி பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் 10 கோடி ரூபா மதிப்புள்ள 2 கிலோ கிராம் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலீஸ் விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபட்டவர், கடையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளது. சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடி, அவற்றை மறைத்து விற்பனை செய்துள்ளதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலீஸ் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், குறித்த பெண்ணை ஜனவரி 27ம் திகதி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp