உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 10 கோடி ரூபா தங்க நகைகள் திருட்டு! அழகி கைது

யாழ்ப்பாணம் மாநகரம், தாவடி பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் 10 கோடி ரூபா மதிப்புள்ள 2 கிலோ கிராம் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலீஸ் விசாரணையில், இந்த திருட்டில் ஈடுபட்டவர், கடையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் என கண்டறியப்பட்டுள்ளது.

சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடி, அவற்றை மறைத்து விற்பனை செய்துள்ளதாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலீஸ் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், குறித்த பெண்ணை ஜனவரி 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

பொலிஸார், திருட்டு சம்பந்தப்பட்ட சான்றுப்பொருட்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது யாழ் மாநகரின் நகைக்கடை தொழிற்சங்கங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்