புதிய சட்டம், பழைய அடக்குமுறை? மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை
பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைக் காக்கும் சட்டம்’ அடக்குமுறைகளைத் தான் மீண்டும் கொண்டுள்ளதா மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது. நீதியமைச்சால் 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்த சட்ட முன்மொழிவு, 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு நவீன மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பழைய சட்டம், சித்திரவதை, தன்னிச்சையான கைது, வலிந்து காணாமலாக்கப்படுதல் மற்றும் சிறுபான்மை மக்களையும் அரசியல் எதிர்ப்பையும் ஒடுக்க பயன்படுத்தப்பட்டதாக நீண்ட காலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. […]









