முற்றுப் பெற்றதா மருத்துவர் போராட்டம்? – நாளை தொடங்குமா அடுத்தக்கட்ட ஆட்டம்?
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய தீர்வு எட்டப்படாத பட்சத்தில், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை நாளை வெளியிடப்போவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. மருத்துவ அதிகாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், சுகாதார அமைச்சர்; நலிந்த ஜயதிஸ்ஸ எழுத்துப்பூர்வமான உடன்படிக்கைகளை வழங்கியிருந்ததாகச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்திய கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த […]









