உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மின்சாரக் கொள்கை மாற்றம்: நுகர்வோர் சங்கத்தின் நிலைப்பாடு!

புதிய தேசிய மின்சாரக் கொள்கை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் கருத்துக்கணிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம் என மின்சாரப் பாவனையாளர் சங்கம் கடுமையாகச் சாடியுள்ளது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, நாட்டின் மிக முக்கிய கொள்கை முடிவை எடுக்கும் கூட்டத்திற்கு வெறும் அரை மணி நேரத்திற்கு முன்பே தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆறு பேர் கொண்ட கொள்கை வகுப்புக் குழுவில் மூன்று பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், இந்தக் கொள்கையைத் தயாரித்ததாகக் கூறப்படும் நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய கூட்டத்திற்கு வரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனால் அவரிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்தப் புதிய கொள்கையானது தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மின்சாரக் கட்டணத்தை நிர்ணயிக்கும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரங்களைப் பறிக்கச் சதி நடப்பதாகவும் எச்சரித்தார்.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து நுகர்வோர் சங்கம் தனது கவலைகளைத் தெரிவித்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்