எலிக்காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.
இதில் சங்கரத்தையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையே நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி சுகயீனமான நிலையில் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருந்தார் அவரின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் மறுநாள்; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் . சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








