செய்திகள்

மன்னாரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மக்களையும் சோதனைக்குட்படுத்தினர்

  • Nov 4, 2024 - 03:28 PM
  • 0 Comments

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (4) காலை மன்னாருக்கு விஜயம் செய்தார். பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் கூட்டத்தில் பரப்புரை செய்யவே அங்கு சென்றார் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இதன் போது ஜே.வி.பி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அடங்கலாக சுமார் 500க்கும் மேற்பட்டவர்  கலந்துகொண்டனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு மன்னார் […]

செய்திகள்

முன்னாள் எம்பி ஆனந்தனையும் செல்வத்தையும் பற்றிய எல்லா உண்மைகளை சொல்லவேண்டி வரும். எமில்காந்தன்.

  • Nov 4, 2024 - 02:36 PM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம்அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது முழு வரலாற்றையும் வெளியே சொல்லவேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாமென வன்னி மாவட்ட சுயேட்சை வேட்பாளரான எமில்காந்தன் தெரிவித்துள்ளார் வவுனியாவில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வன்னி தேர்தல் மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது ஆதரவாளர்கள் தமது சின்னமான கோடாலிச் சின்னத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கிறார்கள் என […]

செய்திகள்

லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கம்பி எண்ணுகிறார்.

  • Nov 4, 2024 - 01:15 PM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தேவையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. இன்று (04) கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியிருந்த அவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவுடுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது கைது […]

செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

  • Nov 4, 2024 - 12:53 PM
  • 0 Comments

  நாடாளுமன்ற தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவைத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் திகதியானது அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்; விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. தேர்தல் சட்டத்தின் […]

செய்திகள்

யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு நினைவுத்தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்.

  • Nov 4, 2024 - 12:38 PM
  • 0 Comments

கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை மற்றும் சம உரிமையின்மை ஆகிய காரணிகளால் யுத்தம் தோற்றம் பெற்று பலரையும் காவு கொண்டது இந்த யுத்தத்தால் தமிழ் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் யுத்தம் மௌனித்து 15 […]

செய்திகள்

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

  • Nov 4, 2024 - 11:18 AM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தன் மீது அவதூறு பரப்பும் வகையிலான கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (3) மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதனை அதை தான் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டதாகவும் தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் கூறியதாக சால்ஸ் கவலை […]

செய்திகள்

திருகோணமலை மீனவர்களுக்கு இந்தியா வாழ்வாதார உதவிகளை வழங்கியது.

  • Nov 4, 2024 - 10:57 AM
  • 0 Comments

  இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்த இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் இந்தியா வழங்கி வைத்துள்ளது. திருமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று (03) திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்க கட்டடத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டார்.  

செய்திகள்

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்படடுள்ளது.

  • Nov 4, 2024 - 10:44 AM
  • 0 Comments

  கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 80 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

செய்திகள்

ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு பொது வாக்கெடுப்பு விஜய் கட்சி தீர்மானம்.

  • Nov 3, 2024 - 05:34 PM
  • 0 Comments

இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என த.வெ.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்ட்டுள்ளது ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என த.வெ.க. செயற்குழு இன்று கூடிய போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது என த.வெ.க. செயற்குழு குற்றம் சுமத்தியுள்ளனர் இரு நாடுகளுக்கு இடையிலான […]

உள்ளூர்

மன்னாரில் கடலட்டைகளுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Nov 3, 2024 - 02:34 PM
  • 0 Comments

  மன்னார் கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு பண்டாரவெளி கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர் அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து கடலட்டையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர் இதன்போது ஒரு டிங்கி படகு, உட்பட 227 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத மீன்பிடி செயற்பாட்டை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் மன்னாரை சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில்; ரோந்து பணிகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியை சேர்ந்த 22 […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp