உள்ளூர்

தண்ணியில் தடுமாறும் யாழ்ப்பாணம்

  • Nov 29, 2024 - 10:41 AM
  • 0 Comments

யாழ் மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று அவசர சந்திப்பு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் ; கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத் துய்யகொந்த ‘ அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மருந்துகள் இடையூறு இன்றி சீராக விநியோகிக்க திறைசேரி விசேட ஒதுக்கீடுகளை காலதாமதமின்றி ஒதுக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் இயற்கை […]

செய்திகள்

திருமலையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவு ஒருவர் பலி

  • Nov 29, 2024 - 10:26 AM
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நேற்று வரை (28) 3,372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ள அதேவேளை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், திருமலையில் 14 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 254 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கி […]

செய்திகள்

வடகிழக்கின் வைத்தியர்களுக்கு பணி இடமாற்றம்!

  • Nov 29, 2024 - 08:34 AM
  • 0 Comments

வட கிழக்கில் பணியாற்றிவரும் சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளரகள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது கீழ்வரும் இடமாற்றமானது எதிர்வரும் 2 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்டையில் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்திய கலாநிதி டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், […]

செய்திகள்

திருகோணமலையிருந்து தமிழகத்தை நோக்கி நகருகின்றது

  • Nov 29, 2024 - 08:20 AM
  • 0 Comments

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கமானது திருமலையிலிருந்து வடகிழக்காக ஏறக்குறைய 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து ஏறக்குறைய 290 கிலோமீற்றர் தொலைவிலும் நேற்று இரவு (28) 11.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த நிலையில், இது வடக்கு – வடமேற்குத் திசையையினூடாக தமிழ் நாட்டின் கரையோப்பகுதியை நோக்கி நகர்ந்து செல்கின்றதென வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். சீரற்ற காலநிலையானது இன்று முதல் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு […]

செய்திகள்

சொந்த காசில் சூணியம் வைத்துக்கொண்ட மத்ரசா பாடசாலையின் அதிபர்

  • Nov 28, 2024 - 11:06 PM
  • 0 Comments

அம்பாறை காரைத்தீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மத்ரசா பாடசாலையின் அதிபர், ஆசிரியரையும் கைது செய்துள்ளனர் அத்துடன் உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 26ஆம் திகதி மத்ரசா பாடசாலை முடிந்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு செல்ல பேரூந்து இல்லாததால், வீதியில் நின்றுள்ளனர் அவ்வழியே சென்ற உழவு இயந்திரத்தில் செல்லுமாறு மாணவர்களை அறிவுறுத்தியதோடு அதற்கான பணத்தையும் […]

செய்திகள்

மாவீரர்களையும் தலைவரையும் போற்றுபவர்கள் முட்டாள்கள் என்கிறார் அலி சப்ரி.

  • Nov 28, 2024 - 10:52 PM
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது என் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தெரிவித்துள்ளார் மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். இந்நிலையில், தமிழ் மக்கள் மாவீரர்களை நினைவுகூற அனுமதித்தது தவறு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளாhர் பயங்கரவாதத்தைக் […]

உள்ளூர்

யாழ் கைதடியில்  ஆலய பூசகரிடம் கொள்ளை 

  • Nov 28, 2024 - 01:44 PM
  • 0 Comments

ஆலய பூசகரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளையர் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கைதடி ஏ-9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. பூசகரின் அபாய ஓலச் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும் 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கைதான சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி […]

செய்திகள்

வெள்ள அனர்த்ததால் 12 பேர் பலி- 3 இலட்சம் பேர் பாதிப்பு

  • Nov 28, 2024 - 12:26 PM
  • 0 Comments

தொடர் மழை பெய்வதால் இதுவரை 23 மாவட்ட மக்கள் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது 99 ஆயிரத்து 876 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் சீரற்ற காலநிலையால் 17 பேர் காயமடைந்துள்ள அதே வேளை 2 பேர் காணாமல் போயுள்ளனர். 95 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதே வேளை […]

உள்ளூர்

நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதி வெள்ளக்காடாகியது

  • Nov 27, 2024 - 04:08 PM
  • 0 Comments

சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகமும் அதனையண்டிய வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் நீர் உட்புகுந்து அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  

உள்ளூர்

கிளிநொச்சியில் சீரற்ற வானிலை தொடர்கின்றது

  • Nov 27, 2024 - 03:32 PM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி வட்டக்கச்சி பெரியகுளம் பகுதிகளில் வீதிகளை மூடியவாறு வெள்ள நீர் தேங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களுக்கு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.  

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp