செய்திகள்

பிரிட்டனை சேர்ந்த கிளிநொச்சி தம்பி கொழும்பில் கைது

  • Dec 1, 2024 - 12:15 PM
  • 0 Comments

பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருந்த தமிழர் ஒருவர் கொழும்பு விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயண தடையின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின் 2009 இல் நாட்டில் இருந்து வெளியேறி பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த சந்தேக நபர் பிரிட்டனில் நிதி சேகரித்து அவற்றை வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அவர் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது […]

செய்திகள்

அநுரவின் ஆப்பு மாகாணசபை முறைமை ரத்து

  • Dec 1, 2024 - 12:01 PM
  • 0 Comments

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரில்வின் சில்வா குறிப்பிட்டார். சுமார் 37 வருடகாலமாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார் தமிழ் மக்களின் […]

செய்திகள்

கடற்றொழில் அமைச்சரும்; இந்திய உயர்ஸ்தானிகரும் சந்திப்பு

  • Dec 1, 2024 - 10:49 AM
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் இலங்கை, இந்திய மீனவர்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை அமையவுள்ளதாக கடற்தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் […]

செய்திகள்

மாவீரர் தினத்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை – பாதுகாப்புச் செயலர்

  • Dec 1, 2024 - 10:37 AM
  • 0 Comments

வடகிழக்கில் உயிர்த்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவேந்தியமையால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லையென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தினை முன்னிலைப்படுத்தியவர்களும் இனவாத அடிப்படையில் செயற்பட்டவர்களையும் அடையாளம் கண்டு உரிய சட்டங்களின் அடிப்படையில் கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் போரின்போதும், அசாதரண சூழல்களின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர முடியும். அதற்கு தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை என்பதை முற்கூட்டியே அறிவித்திருந்தோம். அந்த வகையில் […]

செய்திகள்

டீசல் மண்ணெண்ணெயின் விலைகள் அதிகரிப்பு

  • Dec 1, 2024 - 06:57 AM
  • 0 Comments

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்த விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது இன்று அமுலுக்கு வரும் வகையில் ளுipநவஉழ எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ரூ.311 ஆக இருந்த 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு லீங்ஙர் ஒன்றின் விலை ரூ.309.00 ஆக விற்பனை செய்யப்படுகின்றது 283 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும். அத்துடன் ரூ.183 ஆக […]

செய்திகள்

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மூவர் கைது

  • Dec 1, 2024 - 06:44 AM
  • 0 Comments

நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேக நபர்கள்; சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கைது செய்யப்ட்ட சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது கடந்த வருடங்களில் மாவீரர் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்ததாக கைது செய்யப்ட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் […]

செய்திகள்

ஜனாதிபதி அநுர சிறப்பாக செயற்படுகின்றார்- ரணில்

  • Dec 1, 2024 - 06:29 AM
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அநுர அரசாங்கம் தொடர்ந்தும் இணக்கம் தெரிவித்து சேர்ந்து செயற்படுவதற்கு ஜனாதிபதியை பாராட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமாரி ஹோட்டல் குழுமத்துக்கு சொந்தமான அமாரி கொழும்பு ஹோட்டலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமாரி கொழும்பு ஹோட்டல் குழுமமானது கொழும்பில் உள்ள இலங்கை தொழிலதிபர் ஒருவருக்க சொந்தமான முதல் ஐந்து நட்சத்திர சர்வதேச ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது முன்னாள் ஜனாதிபதி ரணில் […]

உள்ளூர்

தற்காலிக இடைத்தங்கல் நிலையங்களுக்கு அரச அதிபரின் கள விஜயம்

  • Dec 1, 2024 - 06:18 AM
  • 0 Comments

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் நேற்று (30) கேட்டறிந்துக்கொண்டார் யாழ்ப்பாணத்தின் கல்லுண்டாய் பிரதேச வெள்ள நிலமைகளை ஆய்வு செய்து கல்லுண்டாய் தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் கட்டடத்தில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடினார் அதன் போது உடனடியாக தீர்க்க கூடிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் வழங்கினார். இதன் போது அனர்த்தத்திற்கு அப்பால் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சனைக்கு, […]

உலகம்

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த தயார்- ஜெலன்ஸ்கி

  • Nov 30, 2024 - 12:50 PM
  • 1 Comment

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடிக்கின்றது சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தியது மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய ஜனாதிபதி புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ரஷியாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை […]

உள்ளூர்

அந்தர் பெல்டி அடித்த செல்வம் அடைக்கலநாதன்

  • Nov 30, 2024 - 10:47 AM
  • 0 Comments

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதி வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அநுரகுமார பற்றி தேர்தலில் பலி சுமத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp