பிரிட்டனை சேர்ந்த கிளிநொச்சி தம்பி கொழும்பில் கைது
பிரிட்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிதிரட்டிய குற்றச்சாட்டில் பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருந்த தமிழர் ஒருவர் கொழும்பு விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2009இல் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பயண தடையின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின் 2009 இல் நாட்டில் இருந்து வெளியேறி பிரிட்டிஸ் பிரஜாவுரிமையை பெற்றிருந்த சந்தேக நபர் பிரிட்டனில் நிதி சேகரித்து அவற்றை வன்னியில் உள்ள தனிநபர்களிற்கு வழங்கினார் என அவர் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது […]









