இலக்குகளை அடையும் வரை ஈரானில் தாக்குதல் தொடரும்..! ட்ரம்ப் திட்டவட்டம்
அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் காலங்களில் அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தப் பேச்சுவார்த்தைகள் மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், நேற்றையதினம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் […]









