உலகம் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து..!

  • Mar 16, 2026 - 10:11 AM
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் பாதித்துள்ள போர் பதற்றம் காரணமாக, தற்போது 30 சதவீத சுற்றுலாப் பயணிகள் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களை 100 சதவீதம் வெற்றிகரமாக மாற்றுவதே சுற்றுலாத்துறை அமைச்சின் நோக்கமாகும். அந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் சில நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது […]

செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மீட்கப்பட்ட மீன்பிடி படகில் ​​ஹெரோயின் இருந்தமை உறுதி..!

  • Mar 16, 2026 - 10:10 AM
  • 0 Comments

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகில் ஹேரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளது. குறித்த பலநாள் மீன்பிடி படகு இன்று (16.03.2026) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று (15.03.2026) கைது செய்யப்பட்டனர். கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்..!

  • Mar 16, 2026 - 10:05 AM
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். சீனாவின் 90% எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே வருவதாகவும், அதனால் சீனா இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீனா ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்படலாம் என அவர் கூறிய நிலையில் அதற்கான காரணங்களை வௌிப்படுத்தியிருக்கவில்லை. அந்த சந்திப்புக்கு முன்னர் […]

புதியவை உலகம் செய்திகள் முக்கிய செய்திகள்

ட்ரோன் தாக்குதலால் டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் முடங்கின..!

  • Mar 16, 2026 - 10:03 AM
  • 0 Comments

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் தற்போதைய நிலையில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

தென்கடலில் பிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய படகு கரைக்கு..

  • Mar 16, 2026 - 10:01 AM
  • 0 Comments

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடி படகு இன்று (16.03.2026) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று (15.03.2026) கைது செய்யப்பட்டனர். கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை அறிவிப்பு..! 16.03.2026

  • Mar 16, 2026 - 09:59 AM
  • 0 Comments

மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை 2:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள்

பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டுமென இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது..!

  • Mar 16, 2026 - 09:58 AM
  • 0 Comments

மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்துவரும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டுமென இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்தப் பகுதியில் நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதால் இலங்கை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இன்று வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்ததாவது, அதிகரித்து வரும் மோதல்கள் பொதுமக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், ஏற்கனவே பலர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை இலங்கை […]

முக்கிய செய்திகள் புதியவை

வனாத்தவில்லுவ லக்டோவத்தயில் பெருமளவான போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு..!

  • Mar 13, 2026 - 12:48 PM
  • 0 Comments

கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் பலபிட்டிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோகிராம் போதைப்பொருட்கள், இன்று (13.3.2026) வனாத்தவில்லுவ லக்டோவத்தயில் வைத்து அழிக்கப்பட்டன. அத்துடன், அரச இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 வழக்குகளுக்குரிய சான்றுப் பொருட்களும் இதன்போது அழிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் நிறைவடைந்த போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை நீதிமன்றத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டன. […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும்..!

  • Mar 13, 2026 - 12:37 PM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில், அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள ‘தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம்’ வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் 100 ஆண்டுகளுக்கு குத்தகையின் அடிப்படையில் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) காலை நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் […]

முக்கிய செய்திகள் புதியவை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திரவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு..!

  • Mar 13, 2026 - 12:14 PM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இன்று (13.03.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் உள்ள ஷசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, குறித்த சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணை நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp