உள்ளூர் செய்திகள்

சர்சைக்குரிய 323 கொள்கலன்களையும் வர்த்தக வசதியை இலகுபடுத்தும் வகையில்; விடுவிக்கப்பட்டதாக சுங்கத்துறை தெரிவிப்பு

  • Jul 15, 2025 - 07:16 AM
  • 0 Comments

2025ஆம் ஆண்டின் முதற்காலத்தில் சுங்கத்துறை மூலமாக 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய முறையில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில், வழமைக்கே புறம்பான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும், அந்தக் கொள்கலன்களில் மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன. இந்த விடயத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சுங்கத்துறை ஊடக பேச்சாளர், கூடுதல் பணிப்பாளர் நாயகம் சீவாலி அருக்கொடை, வருமானத்தை சேகரிக்க மற்றும் வர்த்தகத்தை எளிதாக்க வேண்டிய பொறுப்பை சுங்கத்துறை வகிக்கின்றதாக கூறினார். ‘சரக்குகளை நீண்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா கூமாங்குள சர்ச்சைக்குரிய மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாம்

  • Jul 15, 2025 - 06:51 AM
  • 0 Comments

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தவர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கை நேற்றையதினம்(14.07) வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார். இதன்போது, அப்பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே குறித்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மரணம் தொடர்பில் விசாரணை செய்ய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசு நிவாரணங்களுக்குப் பதிலாக நாளுக்கு நாள் வரிகளை அதிகரிக்கிறதென காவிந்த ஜயவர்த்ன தெரிவிப்பு

  • Jul 15, 2025 - 06:45 AM
  • 0 Comments

அமெரிக்காவின் வரி அதிகரிப்பு தொடர்பிலே அனைவரும் கதைக்கின்றனர், ஆனால் அரசாங்கம் மக்களுக்கு அதிகரித்துவரும் வரிகள் தொடர்பில் யாரும் கதைப்பதில்லை. வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது நாளுக்கு நாள் வரி அதிகரித்து வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசின் அசமந்த போக்காலேயே அமெரிக்க தீர்வை வரியை மேலும் குறைக்க முடியாமற்போனது – திஸ்ஸ அத்தநாயக்க

  • Jul 15, 2025 - 06:36 AM
  • 0 Comments

அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் சரியான முறையில் செயற்பட்டிருந்தால், அமெரிக்காவின் தீர்வை வரியை இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்கு குறைத்துக்கொள்ள முடிந்திருக்கும். அதேநேரம் தற்போது 30 சதவீதத்துக்கு குறைத்துக்கொண்டிருப்பதன் மூலம் மகிழச்சியடைய முடியுமா என்பதை எமக்கு போட்டியாக இருக்கும் நாடுகளுடன் சந்தை நிலவரத்தின் பிரகாரமே தீர்மானிக்க முடியுமென ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று (14-07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தியாகி திலீபன் ஊர்தியுடன் 2023 ம் ஆண்டு சென்ற திருமலை வாசியை பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பாணை!

  • Jul 15, 2025 - 06:27 AM
  • 0 Comments

திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட கனேசலிங்கம் சிந்துஜன் (35) என்ற அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளருக்கு எதிர்வரும் 15.07.2025 அன்று பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைப்பானை திங்கட்கிழமை (14.07.2025) வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தரும் பொழுது அதன் மீது சர்தாபுரம் என்ற இடத்தில் வைத்து சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குறித்த நபரே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். […]

உள்ளூர் செய்திகள்

யாழில் 14 வயது சிறுமி துஸ்பிரயோம் புலம்பெயர் சந்தேக நபர் கைது

  • Jul 14, 2025 - 08:52 PM
  • 0 Comments

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்து ஒருவர் 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 […]

உள்ளூர் செய்திகள்

வவுனியாவில் , வியாபாரிகளுக்கும் மாநகர சபை ஊழியர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு

  • Jul 14, 2025 - 08:47 PM
  • 0 Comments

இலுப்பையடி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிகளில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்துவந்த நடைபாதை வியாபாரிகளை அகற்றும் செயற்பாடு இன்று வவுனியா மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டது. மாநகர முதல்வர் சு.காண்டீபன் இதுகுறித்து தெரிவிக்கையில், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு இடையூறாக இந்தக் கடைகள் இருந்ததால், அவற்றை அகற்றும் முடிவை மாநகர சபை எடுத்ததாக கூறினார். இதற்கு முந்தையதான கவனயீர்ப்பு போராட்டத்தின்போது, மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடைகளை அகற்றத் தொடங்கினர். இதனால் வியாபாரிகள் […]

உள்ளூர் செய்திகள்

வடக்கில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி மருத்துவ சிகிச்சைகள் ஊக்குவிக்கப்படும்

  • Jul 14, 2025 - 08:43 PM
  • 0 Comments

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் கைதடி சித்த போதனா வைத்தியசாலைக்கு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் சிறப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சித்த போதனா வைத்தியசாலையின் 2025 இன் நோக்கங்கள், வெளிநோயாளர் பிரிவில் உள்ள நோயாளிகள் பற்றிய தகவல்கள், மருந்து உற்பத்தி பிரிவின் உற்பத்தி நடவடிக்கைகள், கற்பித்தல் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள், செயல்பாட்டுத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய வைத்தியசாலைகளை நிறுவுதல், ஆராய்ச்சி […]

உள்ளூர் செய்திகள்

புலம்பெயர் கனேடிய தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும்- வடக்கு ஆளுநர்

  • Jul 14, 2025 - 08:37 PM
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோலஸ்சுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் தனது பணிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவடையவுள்ளதாகத் தூதுவர் ஆளுநரிடம் இதன்போது தெரிவித்தார். இதுவரை வழங்கிய ஒத்துழைப்புக்கும், கனேடிய அரசாங்கத்தின் உதவிகளுக்கும் ஆளுநர் நன்றியை தெரிவித்தார். அவ்வேளை, வடக்கு மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக வன்னி பிராந்தியத்தில் நிலவும் நிலைமைகள் குறித்து ஆளுநர் கவலை தெரிவித்தார். போர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் 800 கிலோ கடத்தல் பொருட்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்டதுடன் 4வர் கைது

  • Jul 14, 2025 - 08:24 AM
  • 0 Comments

கடற்படை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், 800 கிலோகிராம்களுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் கடத்தப்பட்ட போது கடந்த ஜூலை 11ஆம் தேதி கிளிநொச்சி கடற்கரையின் அருகே பறிமுதல் செய்யப்பட்டன. வட மத்திய கடற்படை தளபதிக்குட்பட்ட SLNS புவனேகா எனும் கட்டுப்பாட்டுப் படையணி மேற்கொண்ட நடவடிக்கையின் போது, சந்தேகத்துக்கிடமான இரண்டு வாகனங்கள் நிறுத்திசோதிக்கபட்டன. இதில் 300 கிலோ ஏலக்காய், 260 கிலோ மஞ்சள் தூள், 273 கிலோ உலர் இஞ்சி மற்றும் அனுமதியில்லாத மருந்துகள், அழகு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp