உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிக்காவுக்கு விருந்துபசாரம் கொடுத்து கௌரவிப்பு

  • Jul 27, 2025 - 07:26 PM
  • 0 Comments

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பரின் விருந்துபசார நிகழ்வு, இன்று அக்கரைப்பற்று பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, கலந்து சிறப்பித்தார் நிகழ்வில் கல்முனை சிவில் மேல்முறையீட்டு உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வி. ராம கமலன், கல்முனை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜே. ட்ரொட்ஸ்கி, மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஏ.எம்.எம். றியாழ், நீதவான் நீதிமன்ற […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் செம்மணி தரைப்பகுதியை ராடர் தொழில்நுட்பம் ஊடாக ஸ்கான் செய்ய திட்டம்.

  • Jul 27, 2025 - 04:51 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், தரையை ஊடுருவும் ராடர் தொழில்நுட்பத்தின் (GPR) மூலம் பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நவீன ஸ்கானிங் இயந்திரம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, ஆய்வுப் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ளன. செய்மதிப் படங்களை அடிப்படையாகக் கொண்டு புதைகுழிக்கு வெளியேயும் புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை, துறைசார் நிபுணர் சோமதேவாவால் உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அகழ்வுப் பணிகளை புதைகுழிக்குள் மட்டுமின்றி பரந்த இடங்களிலும் மேற்கொள்ளவேண்டும் என […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கல்விச் சீர்திருத்தமானது ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக அமையும்- பிரதமர் ஹரிணி

  • Jul 27, 2025 - 04:36 PM
  • 0 Comments

கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ‘வளமான நாட்டுக்காக பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக’ எனும் தலைப்பில், இரத்தினபுரி நகர மண்டபத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி முறைமை பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையாக இருக்கக் கூடாது என்றும், இது தமது அரசியல் இயக்கத்தில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட விடயமாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம்பெற்றுள்ளதெனவும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதித்துறை முன்னேறியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்

  • Jul 27, 2025 - 04:09 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, இந்த காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதி வருமானம் 6,933 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது 2024ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7 சதவீத அதிகரிப்பாகும். மேலும், 2025 மே மாதத்தில் மட்டும் பொருட்கள் மற்றும் சேவைகள் துறைகளின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,386 மில்லியன் அமெரிக்க […]

உள்ளூர் செய்திகள்

யாழ் செமமணியில் இன்று புதிதாக என்புக்கூடுகள் அடையாளம் காணப்படவில்லை-

  • Jul 27, 2025 - 03:41 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள மனித புதைகுழிகளில் இன்று மேலும் ஐந்து எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை கடந்த நாட்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகள் என குறிப்பிடப்படுகிறது. இன்று புதிதாக எந்த தொகுதியும் கண்டறியப்படவில்லை. கடந்த ஏழு நாட்களில் மட்டும் 30 தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வுகள், நீதிமன்றம் ‘தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இலக்கம் 01’ மற்றும் ‘இலக்கம் 02’ எனப் பெயரிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிக்காக 45 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி, நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

  • Jul 27, 2025 - 12:27 PM
  • 0 Comments

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பன்னாட்டு விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், செம்மணி புதைக்குழிக்கு நீதி வேண்டும், தமிழர் மீது சிங்கள அரசு நிகழ்த்திய அநீதிக்கு சர்வதேசத் தளத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோஷமிட்டனர். ‛‛தோண்ட தோண்ட எலும்புக் கூடு… பார்க்க பார்க்க நொறுங்குது இதயக் கூடு… இன்னும் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் முறையற்ற கழிவகற்றல் முகாமைத்துவத்தால் உயிரினங்களுக்கு பேராபத்தென்கிறார் பேராசிரியர் கணபதி கஜபதி

  • Jul 27, 2025 - 12:10 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் முறையற்ற கழிவகற்றல் மற்றும் நிர்வாகம், சூழலியல் உயிரினங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது என்று யாழ் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் கணபதி கஜபதி எச்சரித்துள்ளார். சரசாலை குருவிக்காடு, நாகர்கோயில் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகள் வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் வாழும் பாதுகாக்க வேண்டிய பகுதிகளாக உள்ளன. இப்பகுதிகளில் தொடர்ந்து தடுக்க முடியாத வகையில் கழிவுகள் கொட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார். நகரமயமாதல், பொருளாதார வளர்ச்சி, குடிச் தொகை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், ஏற்கெனவே சவாலான […]

உள்ளூர் செய்திகள்

ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா கடற்றொழிலாளர்களால் கௌரவிக்கப்பட்டார்.

  • Jul 27, 2025 - 11:59 AM
  • 0 Comments

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் முல்லைத்தீவில் நடைபெற்றது. பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும், இணையத்தின் தலைவருமான ஜோசப் பிரான்சிஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. காலை 11.00 மணிக்கு இரண்டு நிமிட அக வணக்கத்துடன் தொடங்கிய கூட்டத்தில் தலைவர் தலமையுரை ஆற்றினார். தொடர்ந்து செயலாளர் திரு ஆலம் கூட்ட அறிக்கையையும், பொருளாளர் கணக்கறிக்கையையும் வாசித்தனர். கூட்டத்தின் போது வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் யாப்பு நிறைவேற்றப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைகளை விவாதிக்க வட்டமேசை மாநாடு ஒன்றை ஏற்பாடு […]

உள்ளூர் செய்திகள்

ஐ.நாவுக்கு அனுப்பவுள்ள கூட்டுக்கடிதத்தின் வரைபு, தமிழரசுக்கட்சிக்கும் வழங்கப்படும்-கஜேந்திரகுமார்

  • Jul 27, 2025 - 11:54 AM
  • 0 Comments

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ள கூட்டுக்கடிதத்தின் வரைபு, தமிழரசுக்கட்சிக்கும் வழங்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் கோரியமைக்கப்பட்ட கடிதம், அடுத்த மாதம் ஐ.நா.வுக்கு அனுப்பப்படும். இந்தக் கடிதத்தை அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புகள் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த செயற்பாட்டுக்கான கலந்துரையாடலுக்கு தமிழரசுக்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், அவர்கள் பங்கேற்காமல் புறக்கனித்தனர். […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மொனராகலையில் அநுரவுக்கு எதிராக விவசாயிகள் போர் கொடி

  • Jul 27, 2025 - 09:07 AM
  • 0 Comments

மொனராகலையில் செவனகல பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் நேற்று (26-07) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், செவனகல சர்க்கரை ஆலைக்கு வழங்கிய கரும்புக்கான தொகை செலுத்தப்படாததற்கும் நிலுவையில் உள்ள பணம் வழங்கப்படாமைவிற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். அவர்களின் வலியுறுத்தலின்படி, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஒரு டொன்னுக்கு 15,000 ரூபா வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் தற்போது அந்த தொகையை 10,000 ரூபாவாக குறைக்கும் திட்டத்தில் அரசு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp