உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2026 வெள்ளிக்கிழமை தென்மராட்சி அபிவிருத்திக் கழகமும் (Thenmaradchi Development Association) கிரீன் குளோப் (Green Globe) அமைப்பும் இணைந்து சாவகச்சேரி நகர சபையுடன் கைகோர்த்து இன்று(05.06.2026) காலை 6.30மணிக்கு தனங்கிளப்பு வீதி, கண்ணாடிப்பிட்டி இந்து மயானம் ஆகிய பகுதிகளில் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.
இந்த சிறப்பு நிகழ்வு சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் , உபதவிசாளர் ஞா.கிசோர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் என்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. S. சசிகரன் , பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர் Dr. S. செல்வகணேஸ் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் நிகழ்வில் தென்மராட்சி அபிவிருத்திக் கழக தலைவர் திரு அ. கயிலாயப்பிள்ளை, நிர்வாகத்தினர் மற்றும் கிரீன் குளோப் அமைப்பினர், தென்மராட்சியின் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நடுகை நிகழ்வுக்கான மரங்களை Dr. S. சசிகரன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


