உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் தேவி தொடரூந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..!

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான யாழ் தேவி (Yal Devi) ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பயண விபரங்கள்:

இலங்கை புகையிரத சேவையின் அறிவிப்பின்படி, யாழ் தேவி புகையிரதத்தின் பயண நாட்கள் மற்றும் ஒழுங்குகள் வருமாறு:

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம்/காங்கேசன்துறை நோக்கி: திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிக்கும்.

யாழ்ப்பாணம்/காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி: செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிக்கும்.

வடக்கு ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கல் பணிகளைத் தொடர்ந்து, இந்தச் சேவை மீண்டும் அமுலுக்கு வருகின்றது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை