உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தொண்டமானாறு செல்வ சந்நிதியானுக்கும் தடுப்பு வேலிகள்..!

யாழ்ப்பாணத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான தொண்டமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்திற்கும் முகப்பிற்கு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

சன்னிதியானை காண வரும் அடியவர்கள் இடையூறின்றி சென்று சந்நிதியானை வணங்குவதற்கும், ஆலய வளாகத்திற்குள் வாகனங்கள் உட்செல்வதால் ஏற்படும் நெரிசலை குறைப்பதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதுமட்டுமல்லாது வழிபாடுகள் தவிர்ந்த ஏனைய தேவையற்ற செயற்பாடுகளை தவிர்ப்பதற்காகவும், ஆலயத்தின் புனித தன்மையை பேணுவதற்காகவும் இந்த தடுப்பு வேலி ஆலய முகப்பில் போடப்பட்டுள்ளது.

அதெவேளை தற்போது முகப்பில் மட்டுமே வேலி. ஏனைய இடங்களுக்குள்ளால் வாகனங்களை இறக்க இயலாத ஏற்பாடுகள் முன்னரே செய்துவைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் காலத்தின் தேவை கருதி வேலி அமைக்கப்பட்டுள்ளமையானது வரவேற்கத்தக்கது என சன்னதியான் அடியவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளை நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திலும் ஆலய தூய்மையை பேணுவதற்காக கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp