செய்திகள்

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது..!

50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர்.

அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களிடம் இருந்து 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 14 கிலோ கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்தார்.

மேலும், இவர்களிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்